Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணிகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. வாக்குச்சாவடி மற்றும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் பணியாற்றும் ஊழியர்களின் ஊதியம் இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தேர்தல் ஆணையத்துக்காக பணியாற்றும் அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. அனைத்து தொகுதிகளிலும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Tamil Nadu Election Staff Honorarium Doubled For Poll And Counting Duties

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததிலிருந்து மாநிலம் முழுவதும் 24 மணி நேரமும் கண்காணிப்பு குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த குழுக்கள் பல்வேறு இடங்களில் தீவிர சோதனைகள் நடத்தி வருகின்றன.

மார்ச் 30, 2026 நிலவரப்படி, இந்த சோதனைகளில் மொத்தம் ரூ.296 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் ரூ.61.98 கோடி ரொக்கம், ரூ.1.17 கோடி மதிப்பிலான மதுபானங்கள், ரூ.8.30 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் மற்றும் ரூ.197.35 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்கள் அடங்கும். தேர்தலை நேர்மையாக நடத்தும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Election 2026

இந்த நிலையில் தேர்தல் பணியாளர்களின் ஊதியத்தை உயர்த்தி தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. தேர்தல் காலத்தில் நீண்ட நேரம் பணியாற்றும் பணியாளர்களுக்கு இது ஊக்கமாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வாக்குச்சாவடி தலைமை அலுவலர் ஊதியம் ரூ.1,700-இல் இருந்து ரூ.3,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு அலுவலர் ஊதியம் ரூ.1,300-இல் இருந்து ரூ.2,600 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர் ஊதியம் ரூ.850-இல் இருந்து ரூ.1,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணும் உதவியாளர் ஊதியம் ரூ.650-இல் இருந்து ரூ.1,400 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
நுண் பார்வையாளர் (Micro Observer) ஊதியம் ரூ.1,000-இல் இருந்து ரூ.2,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வு தேர்தல் பணிகளில் ஈடுபடும் ஆயிரக்கணக்கான பணியாளர்களுக்கு நேரடி நன்மை அளிக்கும் என கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+