Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கதறி அழுது ஜாமீன் பெற்ற மாஜி சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்! கைதுக்கு பின் கோர்ட்டில் நடந்தது தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன் அளித்த புகாரில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்நிலையில் தான் நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் கதறி அழுது ஜாமீன் பெற்ற புதிய தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ். இவர் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார். பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்பட்ட வழக்கில் அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu Ex special DGP Rajesh Das gets bail after crying in Court

இந்த வழக்கில் ராஜேஷ் தாஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில் அவரை கைது செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அவரது மனைவியும், ஐஏஎஸ் அதிகாரியுமான பீலா வெங்கடேசன், ராஜேஷ் தாஸை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளார்.

மேலும் பீலா ராஜேஷ் என்ற தனது பெயரை பீலா வெங்கடேசன் (வெங்கடேசன் என்பது பீலாவின் தந்தை பெயர்) என மாற்றம் செய்து கொண்டார். இந்நிலையில் தான் ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசனை மிரட்ட முயன்றதாக ராஜேஷ் தாஸ் மீது புகார் எழுந்தது. அதாவது தையூரில் உள்ள பண்ணை வீட்டில் காவலாளியை தாக்கிவிட்டு அத்துமீறி நுழைய முயற்சித்து மிரட்ட முயன்றதாக ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன் சார்பில் ராஜேஷ் தாஸ் மீது கேளம்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

ராஜேஷ் தாஸ் - பீலா வெங்கடேசன் ஆகியோரின் விவாகரத்து வழக்குக்கு இடையே இந்த புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் ராஜேஷ் தாஸ் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் முன்னாள் டிஜிபி ராஜேஸ் தாஸ் இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். அதன்பிறகு அவரை கேளம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என கூறப்படுகிறது. அதோடு போலீசாரை மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து காவல் துறையை பணி செய்ய விடாமல் தடுத்ததாக சட்டப்பிரிவு 353 கீழ் ராஜேஷ் தாஸ் மீது இன்னொரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. மொத்தம் 6 பிரிவுகளில் ராஜேஷ் தாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து ராஜேஷ் தாசுக்கு கு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதன்பிறகு திருப்போரூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து செல்லப்பட்டார். அப்போது அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதாக தெரிவித்தார். இதையடுத்து அவரை போலீசார் காவல்துறை வாகனத்தில் அமர வைத்து தண்ணீர் வழங்கினர். ராஜேஷ் தாஸ் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பினார். அதன்பிறகு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அப்போது அவரை நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்து உத்தரவிட்டது.

இந்நிலையில் தான் ராஜேஷ் தாஸ் நீதிமன்றத்தில் கதறி அழுது ஜாமீன் வாங்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நெஞ்சுவலி எனக்கூறிய ராஜேஷ் தாஸை போலீசார் சிறிது நேரம் கழித்து நீதிபதி முன்பு ஆஜர்ப்படுத்தினர். அப்போது வழக்குகள் குறித்து போலீசார் தெரிவித்தனர். இந்த வேளையில் ராஜேஷ் தாஸ் நீதிபதி முன்பு கதறி அழுதுள்ளார். தனக்கு உடல்நலம் மிகவும் சோர்வாக உள்ளது. இதனால் உடல்நலனை கருத்தில் கொண்டு ஜாமீன் வேண்டும் எனும் வகையில் புலம்பி உள்ளார். இதையடுத்து தான் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+