மாநாட்டில் பிடிஆர் பேச்சை கேட்க.. விடாமல் குவிந்த கூட்டம்.. வேறு வழியின்றி மூடப்பட்ட கதவுகள்
சென்னை: சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்து வரும் நிலையில் அமைச்சர் பிடிஆர் இருக்கும் அரங்கில் அவரின் பேச்சை கேட்க நூற்றுக்கணக்கில் மக்கள் குவிந்துள்ளனர்.
சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு முதலீடுகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. 2 நாட்கள் நடக்கும் மாநாடு ஆகும். நேற்று நடந்த மாநாட்டில் பின் வரும் முதலீடுகள் செய்யப்பட்டன. தமிழ்நாட்டை நோக்கி முதலீடுகளாக குவிந்து வருகின்றன.

வேலைவாய்ப்புகள்: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் நேற்று மட்டும் 2 இலட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன.
டாடா - 12,082 கோடி ரூபாய் முதலீடு 40,500 பேருக்கு வேலைவாய்ப்பு
வின்பாஸ்ட் - 16,000 கோடி ரூபாய் முதலீடு 3,500 பேருக்கு வேலைவாய்ப்பு
ஜே.எஸ்.டபிள்யூ - ரூ.12,000 கோடி ரூபாய் முதலீடு 6,600 பேருக்கு வேலைவாய்ப்பு
பர்ஸ்ட் சோலார்- 8,100 கோடி ரூபாய் முதலீடு 1.100 பேருக்கு வேலைவாய்ப்பு
TVS - 5,000 கோடி ரூபாய் முதலீடு 500 பேருக்கு வேலைவாய்ப்பு
பெகட்ரான் - 1,000 கோடி ரூபாய் முதலீடு 8,000 பேருக்கு வேலைவாய்ப்பு
மிட்சுபிஷி - ரூ.200 கோடி ரூபாய் முதலீடு 50 பேருக்கு வேலைவாய்ப்பு
கோத்ரெஜ்- 515 கோடி ரூபாய் முதலீடு 446 பேருக்கு வேலைவாய்ப்பு
Qualcomm - 177 கோடி ரூபாய் முதலீடு 1,600 பேருக்கு வேலைவாய்ப்பு
ஹூண்டாய் - 1,180 கோடி ரூபாய் முதலீடு
குவிந்த மக்கள்: சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்து வரும் நிலையில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இருக்கும் அரங்கில் அவரின் பேச்சை கேட்க நூற்றுக்கணக்கில் மக்கள் குவிந்துள்ளனர். அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் பங்கேற்கும் அரங்கில் அதிகளவில் பங்கேற்பாளர்கள் குவிந்து உள்ளனர். அவர் டீப் திங்க் மற்றும் ஏஐ தொழில்நுட்பம் குறித்து பேசி வருகிறார்.
அவரை பேச்சை கேட்க அரங்கு முழுக்க மக்கள் குவிந்தனர். கடைசியில் இடம் இல்லாமல் அவரின் அரங்கை மூடி.. க்ளோஸ் மீட்டிங் போல மூடப்பட்ட அரங்கில் பலநூறு பேர் முன் பிடிஆர் பேச வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த அளவிற்கு அவரின் உரையை கேட்க பலர் குவிந்து இருந்தனர்.,
ஸ்டாலின் பேச்சு: முன்னதாக இந்த நிகழ்வில் பேசிய முதல்வர் ஸ்டாலின், பொதுவாக வெளிநாடுகளுக்கு செல்லும்போதுதான் நான் சூட் போடுவது வழக்கம். ஆனால் இங்கு எல்லா வெளிநாடுகளும் தமிழ்நாட்டிற்குள் வந்துவிட்ட காரணத்தால், இங்கே நான் கோட் சூட் அணிந்து வந்திருப்பது பொருத்தமாக உள்ளது. இன்று காலையிலிருந்து சென்னையில் மழை பெய்து கொண்டிருக்கிறது. நான் இங்கு வந்தவுடன், முதலீடும் மழையாக பெய்யும் என்ற நம்பிக்கை எனக்கு வந்துள்ளது.
தமிழ்நாடு அனைத்து வகைத் தொழில்களிலும், முன்னேறிய மாநிலமாக இன்றைக்கு இருக்கிறது. கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கின்ற மாநிலமாக இருப்பதால், இதற்கான திறமையான தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் ஏராளமாக கிடைத்தார்கள். சிறந்த தொழில் அதிபர்களும், திறமையான தொழிலாளர்களும் நிறைந்த தமிழ்நாட்டுக்கு, உலகத் தொழில் முனைவோரான நீங்கள் வந்திருக்கிறீர்கள். நாங்கள் விடுத்த அழைப்பை ஏற்று வந்துள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்பதுடன் எனது உளமார்ந்த நன்றியையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன், என்று கூறினார்.












Click it and Unblock the Notifications