பணமழை கொட்டுது.. அரசு பஸ் டிக்கெட் புக்கிங்கில் பம்பர் பரிசு.. ரிசர்வ் செய்து பயணித்தோருக்கு ஹேப்பி
சென்னை: அதிக விரைவு போக்குவரத்துக்கழக பேருந்துகளில் முன்பதிவு செய்து அதிகமுறை பயணித்தவர்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு ரொக்கப்பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது.
தமிழக போக்குவரத்து துறையை பொறுத்தவரை, பயணிகளின் வசதிகளுக்காகவே பல்வேறு வசதிகளை செய்து தந்து வருகிறது.. வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்கள், பண்டிகை காலங்கள் உட்பட சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது.

ஆன்லைன் பதிவு: எனினும், ஆன்லைன் முன்பதிவு திட்டத்தில், வார விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களை தவிர்த்து, சாதாரண நாட்களில் பயணம் மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் பயணிகள் தேர்வு செய்யப்பட்டு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சாதாரண நாட்களில் பயணம் மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் பயணிகள் தேர்வு செய்யப்பட்டு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஆகஸ்டு மாதத்திற்கான குலுக்கல் முறையில் 13 பயணிகளை சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ், கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்துள்ளார்.
ரொக்கப்பரிசு: அதன்படி, குரு பிரசாத், ராஜா ஞானபிரகாசம், சபரிகிரி ஆகியோருக்கு தலா ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்பட உள்ளது. மேலும், 10 பயணிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. தேர்வு செய்யப்பட்டுள்ள 13 பயணிகளுக்கும் விரைவில் பரிசுகள் வழங்கப்படும்" என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
இந்த அறிவிப்பானது பயணிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது.. காரணம், தமிழக அரசு போக்குவரத்து கழகங்களின் தொலைதுார பஸ்களில் பயணிக்க, www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் செயலியில், டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. வார விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களை தவிர்த்து, இதர நாட்களில் முன்பதிவு செய்து, எளிதாக பயணம் செய்வதை ஊக்கப்படுத்தும் வகையில், இந்த பரிசு தரப்படுகிறது.
குலுக்கல் முறை பரிசு: ஒவ்வொரு மாதத்திலும், கணினி குலுக்கல் முறையில் 3 பயணியருக்கு தலா, 10,000 ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கும் திட்டம், கடந்த வருடம் ஜனவரி முதல் அமலில் உள்ளது.. இதன்படி, கணினி வாயிலாக குலுக்கல் நடத்தி, 13 பேரை தேர்வு செய்து, முதல் 3 பேருக்கு தலா 10,000 ரூபாய், இதர 10 பேருக்கு தலா 2,000 ரூபாய் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
கடந்த ஜூன் மாதத்திற்கான 13 பேரை, கணினி குலுக்கல் முறையில், சென்னை மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ் தற்போது தேர்வு செய்துள்ளனர்.. தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த 13 பேருக்கும் ரொக்கப் பரிசு விரைவில் வழங்கப்பட உள்ளதால், பொதுமக்களிடம் இந்த அறிவிப்பானது பெரும் கவனத்தை பெற்று வருகிறது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications