Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பிரிச்சி போடுங்க".. அரிசி அட்டைதாரர்களே.. கூட்டுறவு அங்காடியில் இனி "இந்த" பொருளும் கிடைக்கும்.. செம

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியும் நிம்மதியும் தரக்கூடிய வகையில், முக்கிய அதிரடி ஒன்றை தமிழக கூட்டுறவுத்துறை எடுத்துள்ளது.

சமீபகாலமாகவே மளிகை பொருட்களின் விலைகள் உயர்ந்து வருகிறது.. இதில் முக்கியமானது துவரம் பருப்பு.. கடந்த வருடம் முதலே துவரம் பருப்பு உற்பத்தி குறைவாகவே இருப்பதாக சொல்லப்பட்டு வந்தது.

கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மாநிலங்களில் பெய்த பருவம் தவறிய மழையால் பருப்பு பயிர்கள் நாசமாகி உற்பத்தி பாதிக்கப்பட்டுவிட்டதாகவும், அதனால், கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டில் துவரம் பருப்பு உற்பத்தி குறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் சொன்னார்கள்..

Tamil Nadu Government Co Operative Stores and Good decision Tur Pulse Prices

அதிருப்தி: அதனால்தான், இப்போதுவரை துவரம் பருப்பு விலை உயர்ந்துகொண்டே வருகிறது. துவரம் பருப்பு பற்றாக்குறையை சமாளிக்க மத்திய அரசு 10 லட்சம் மெட்ரிக் டன் பருப்புகளை இறக்குமதி செய்யப்போவதாக கடந்த வருடமே சொன்னார்கள்.. ஆனாலும், கூட பருப்பு விலை உயர்ந்து வருகிறது.. தேவையை விட குறைவான சரக்குகளே வருவதால், இறக்குமதி செய்தாலும் துவரம் பருப்பு விலை கட்டுக்குள் வராது என்று தொழில்துறையினரும் கருத்து தெரிவித்தனர்.

கடந்த ஒரு ஆண்டில் மட்டும் துவரம் பருப்பு விலை 25 சதவீதம் உயர்ந்துள்ளதாம்.. தென்னிந்தியாவில் சாம்பார், கூட்டு, கடையல், வடை உள்ளிட்ட பல விதமான உணவு வகைகளை தயார் செய்ய துவரம் பருப்பே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. வட இந்தியாவிலும் துவரம் பருப்பு சமையலில் பல விதங்களிலும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு 44 லட்சம் டன் முதல் 45 லட்சம் டன் வரை துவரம் பருப்பு சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது.

ஆனால், கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் மொத்த விலையில் துவரம் பருப்பு கிலோ ரூ.100-க்கு விற்கப்பட்டது. இந்த ஆண்டு தற்போது துவரம் பருப்பு மொத்த விலையில் ரூ.129-க்கு விற்கப்படுகிறது. ஒரு ஆண்டில் மட்டும் 25 சதவீத அளவுக்கு விலை உயர்ந்து உள்ளது. தற்போது சில்லரை விலையில் ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.150-க்கு விற்கப்படுகிறது.

Tamil Nadu Government Co Operative Stores and Good decision Tur Pulse Prices

து.பருப்பு விலை: நம் தமிழகத்தை பொறுத்தவரை, தமிழக ரேஷன் கடைகளில், அரிசி கார்டுதாரர்களுக்கு அதிகபட்சம், 1 கிலோ துவரம் பருப்பு, 25 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. ஏற்கனவே தக்காளி விலை விண்ணை முட்டிய நிலையில், இப்போது வெளிச்சந்தையில் கிலோ துவரம் விலை 150 ரூபாயை தாண்டியுள்ளது... இதனால் வெகுஜன மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிவருகின்றனர்.

அதனால், கூட்டுறவு விற்பனை இணையம் வாயிலாக, 100 டன் துவரம் பருப்பு வாங்கி, பல்பொருள் அங்காடிகளில் குறைந்த விலைக்கு விற்கும் நடவடிக்கையில் கூட்டுறவு துறை ஈடுபட போகிறதாம்.. இதுகுறித்து, கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் சொல்லும்போது, ஒரு வாரத்திற்குள், 100 டன் துவரம் பருப்பு வாங்கப்பட உள்ளது..

நிம்மதி: இதற்காக இன்னும் 2 நாட்களில் டெண்டர் கோரப்பட உள்ளது.. இதையடுத்து, வெளிச்சந்தையை விட கிலோவுக்கு, 30 ரூபாய்க்கும் குறைவாக விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளர். கூட்டுறவுத்துறையின் இந்த முடிவானது, ரேஷன் அட்டைதாரர்களுக்கு மிகுந்த நிம்மதியை தந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+