அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்பை பணமாக மாற்றி பெறும் நடைமுறை நிறுத்தி வைப்பு - அரசாணை
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்பை பணமாக மாற்றி பெறும் நடைமுறையை நிறுத்தி வைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை : ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்பை பணமாக மாற்றி பெறும் நடைமுறையை நிறுத்தி வைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு விடுப்பு விதிகள்படி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு 15 நாட்கள் ஈட்டிய விடுப்பாக அறிவிக்கப்படுகிறது. அந்த ஆண்டில் 15 நாட்கள் ஈட்டிய விடுப்பை எடுக்காதவர்களுக்கு, ஆண்டு முடிவில், 15 நாட்களுக்கான முழு ஊதியமும் எவ்விதப் பிடித்தமும் இன்றி வழங்கப்படும்.
இதை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 2 ஆண்டுகளுக்கு சேர்த்து 30 நாட்கள் அதாவது ஒரு மாத ஊதியமாகவும் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளும் நடைமுறை உள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா தடுப்பு பணிகளுக்கு அதிக அளவில் நிதி தேவைப்பட்டதால், ஓராண்டுக்கான ஈட்டிய விடுப்பை நிறுத்தி வைக்க தமிழக அரசு முடிவெடுத்து கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதி அரசாணை வெளியிட்டது. கடந்த 2021ஆம் ஆண்டும் இதே நடைமுறை நீடித்தது.
இந்த நிலையில் இந்த ஆண்டும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்பை பணமாக மாற்றி பெறும் நடைமுறையை நிறுத்தி வைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications