நீதிபதி சுவாமிநாதன் 3 நாட்களுக்கு முன் உத்தரவிட்டு! உடனே செய்ங்கன்னு சொன்னா எப்படி? அரசு தரப்பு கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருப்பரங்குன்றம் மலையில் தீபத்தூணில் விளக்கேற்ற வேண்டும் என 3 நாட்களுக்கு முன்பு தனிநீதிபதி உத்தரவிட்டு உடனே நடைமுறைப்படுத்த கூறினால் எப்படி என தமிழக அரசு தரப்பு வாதத்தில் கேள்வி எழுப்பியுள்ளது.

திருப்பரங்குன்றத்தில் தீபத் திருவிழாவின் போது மலை உச்சியில் தீபத் தூணில் விளக்கேற்ற வேண்டும் என பாஜக ராமரவிக்குமார் வழக்கு தொடுத்த போது அதை விசாரித்த மதுரை கிளையின் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தீபத் தூணில் விளக்கேற்ற உத்தரவு பிறப்பித்தார்.

thirupparankundram court

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கோயில் நிர்வாகமும் மாவட்ட ஆட்சியரும் மேல்முறையீடு செய்தனர். அதன் மீதான விசாரணை இன்று இரு நீதிபதிகள் ஜெயசந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பு தனது வாதத்தில் மதநல்லிணக்கம், பொது அமைதியை கருத்தில் கொள்ள வேண்டும். மனுதாரர் தாக்கல் செய்யும் விவரங்களை அப்படியே எடுத்துக் கொள்ள இயலாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்து சமய விதிக்குள்பட்டு அனுமதி பெற்றுத் தேவஸ்தானமே இடத்தை மாற்றலாம். அந்த இடம் தர்கா, நெல்லிகோப்பு பகுதியில் இருந்து 15 மீட்டருக்கு அப்பால் உள்ளது. 73 ஆண்டுகளாக உச்சி பிள்ளையார் கோயில் மண்டபத்திலேயே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

தீபமேற்றும் இடத்தை மாற்றுவது குறித்து கோயில் நிர்வாகம் முடிவெடுக்க வேண்டும் என ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 1970, 2014ஆம் ஆண்டுகளில் தொடரப்பட்ட வழக்குகளும் தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்தன.

3 நாட்களுக்கு முன் தனி நீதிபதி உத்தரவிட்டு உடனே நடைமுறைப்படுத்தக் கூறினால் எப்படி? என கேள்வி எழுப்பியிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+