Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அற்புதம்.. பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. தமிழக அரசின் புது அறிவிப்பு.. இனி நிம்மதியா இருக்கலாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து சூப்பர் அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.. இது பள்ளி மாணவர்களுக்கு நிம்மதியையும், நம்பிக்கையையும் தந்து வருகிறது.

முதலமைச்சரின் காலை உணவு திட்டம், கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 15ம் தேதி மறைந்த முதலமைச்சர் அண்ணா பிறந்தநாள் அன்று, 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்துக்காக, 2023-24 நிதியாண்டில் ரூ.404.41 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்த அரசாணையும் வெளியாகியிருந்தது.

Tamil Nadu Government School Students and Huge Announcement about Chief Ministers Breakfast Program

காலை உணவுத்திட்டம்: இந்நிலையில், இந்த திட்டம் அடுத்தக்கட்ட விரிவாக்கத்துக்கு நகர்கிறது.. வரும் கல்வி ஆண்டு முதல், 31,008 அரசு பள்ளிகளில் பயிலும் 15,75,000 மாணவர்கள் பயன்பெறும் வகையில், முதலமைச்சரின் காலை உணவு திட்டம் வரும் ஆகஸ்ட் 25ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் விரிவுபடுத்தப்பட உள்ளது.

மறைந்த முதல்வர் கருணாநிதி பயின்ற திருக்குவளை பள்ளியில், முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்க போகிறார். 31,000 பள்ளிகளில் படிக்கும், 15 லட்சம் மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்போவதால், அதற்கு, 2 மாதங்களுக்கு தேவையான ரவை, சம்பா ரவை, சேமியா ஆகியவை, தலா, 617 டன் கொள்முதல் செய்யும் பணியில், தமிழக நுகர்வோர் கூட்டுறவு இணையம் ஈடுபட்டுள்ளதாம்..

சம்பா ரவை: அந்தவகையில், இப்போதைக்கு "பாம்பினோ" என்ற நிறுவனத்திடம் இருந்து சேமியா, வறுத்த ரவையும், அனில் நிறுவனத்திடமிருந்து சம்பா ரவையும் வாங்கப்பட்டுள்ளதாகவும், அவை, ஒவ்வொரு பள்ளிக்கும் எவ்வளவு தேவை என்று கணக்கிட்டு, ரேஷன் கடைகளை நடத்தும் கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பப்பட்டு, பிறகு, அங்கிருந்து, ரேஷன் கடைகளுக்கு அனுப்பி பள்ளிகளுக்கு வினியோகம் செய்யும் பணி நடந்து வருதாகவும் சொல்கிறார்கள்.

பள்ளி மாணவர்களுக்கு அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே, உள்ளூரில் கிடைக்கும் காய்கறிகளைக்கொண்டு சுத்தமான முறையில் உணவினை தயாரிக்கும்படி சத்துணவு ஆய்வாளர்களுக்கு ஏற்கனவே அறிவுரைகள் வழங்கப்பட்டு வரும்நிலையில், அதை மேலும் செம்மைப்படுத்தும் நோக்கில் இன்னொரு அறிவிப்பையும் தமிழக அரசு வழங்கி உள்ளது.

குறிப்பாக, தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை சிற்றுண்டியின் அளவு மற்றும் நேரம் ஆகியவற்றை, சத்துணவு பணியாளர்கள் கைபேசி செயலியில் பதிவேற்றம் செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.

Tamil Nadu Government School Students and Huge Announcement about Chief Ministers Breakfast Program

அதாவது, ஒவ்வொரு மாணவர்களுக்கும் எவ்வளவு உணவு வழங்கப்படுகிறது? உணவு பரிமாறும் நேரம் என்ன? என்பது குறித்த அனைத்து விவரங்களையும், அந்த கைபேசி செயலியில் பணியாளர்கள் பதிவு செய்திருக்க வேண்டுமாம்..

அபாரம்: சத்துணவு பணியாளர்கள் சமையல் தொடங்குவதை காலை 6 மணிக்குள் பதிவேற்றம் செய்யும்படியும், காலை 8.15 மணிக்குள் சமையல் செய்து முடிந்ததை பதிவேற்றம் செய்திருக்க வேண்டும் என்றும், காலை 9 மணிக்குள் மாணவர்களுக்கு உணவு பரிமாறுவதை பதிவேற்றம் செய்திருக்க வேண்டும் என்றும், காலை 11 மணிக்குள் எத்தனை மாணவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது? என்பது குறித்தும் மொத்த டீடெயிலும் அதில் பதிவாகியிருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

தமிழக அரசின் இந்த அறிவிப்பானது, மாணவர்களையும், பெற்றோர்களையும் மட்டுமல்லாமல் பொதுமக்களையும் சேர்த்தே குளிர வைத்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+