தேசிய கல்வி கொள்கை வரைவை கண்டித்து எதிர்ப்பு இயக்கம்.. முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் முடிவு
சென்னை: தேசிய கல்வி கொள்கைக்கான புதிய வரைவை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.
சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் சங்க கூட்டத்தில், 2019-ம் ஆண்டிற்கான தேசிய கல்வி கொள்கை வரைவு குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பிற்கு வழிவகுக்கும் இந்த வரைவு ஆவணத்தை திரும்ப பெற வலியுறுத்தி, எதிர்ப்பு இயக்கம் நடத்த இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு தேசிய கல்வி கொள்கைக்கானவரைவு ஆவணத்தை திரும்ப பெற வலியுறுத்தி, தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வரும் 21-ம் தேதி எதிர்ப்பு இயக்கம் நடைபெறும் என தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
மத்திய அரசின் தேசிய வரைவு கல்வி கொள்கை என்பது அடிப்படையில் சமூக நீதிக்கு எதிரானது. மாநில அரசினுடைய உரிமைக்கு எதிரானது. இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பை மையப்படுத்தியது என்றே தாங்கள் கருதுவதாக, மதுரை தொகுதி எம்.பி-யும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை சேர்ந்தவருமான சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.
செய்தியளர்களிடம் பேசிய அவர் மருத்துவப் படிப்பு மற்றும் உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வுகள் என பல்வேறு விவகாரங்களில் மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்படும் அளவுக்கு, புதிய விதிமுறைகள் புகுத்தப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி நாட்டிலுள்ள குழந்தைகளுக்கு 3 வயதில் இருந்தே கட்டாய கல்வியை புகுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கல்வியில் சிறந்து விளங்கும் பல உலக நாடுகளில் கூட 7 வயதுக்கு பிறகே கட்டாய கல்வி சட்டம் அமலில் உள்ளது. ஆனால் இந்தியாவில் கல்வி உரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்ற கருத்து, தேசிய கல்வி கொள்கை வரைவில் முன் வைக்கப்பட்டிருக்கிறது.
இது மாதிரி கல்விக் கொள்கையின் வரைவின் அடிப்படை விஷயங்களிலேயே பல முரண்பாடுகள் இருக்கின்றன என்று கடுமையாக சாடினார்.
எனவே தேசிய கல்வி கொள்கை வரைவை முற்றிலும் நிராகரிக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். வரும் 22-ம் தேதி டெல்லியி மாநில கல்வி அமைச்சர்கள் மாநாடு நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் பங்குபெற உள்ள தமிழக கல்வி அமைச்சர் இந்த வரைவு கொள்கையை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் என்றும் கோரினார். தேசியகல்வி கொள்கை வரைவை அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்த்து வெளியிட வேண்டும் என்பதும் எழுத்தாளர்களின் கோரிக்கை.
மேலும் புதிய கல்விக் கொள்கை வரைவில் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும் புகார் தெரிவித்துள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications