Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழக அரசை கடுமையாக விமர்சித்த ஆளுநர் ரவி.. ஆனால் டேட்டாவில் இருக்கும் பிழை.. கணக்கு இடிக்குதே

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று தொடங்கிய தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில், மரபுப்படி உரையாற்றாமல் ஆளுநர் ஆர்.என். ரவி திடீரென வெளியேறினார். அவரது இந்தச் செயலுக்கான காரணங்களை லோக் பவன் பத்திரிகை அறிக்கை மூலம் விவரித்தது. அந்த அறிக்கையில் தமிழ்நாடு அரசு மீதும், தமிழ்நாடு வளர்ச்சி தொடர்பாகவும் கடுமையான விமர்சனங்கள், புகார்கள் வைக்கப்பட்டன.

ஆனால், அந்த அறிக்கையில் உள்ள பல தகவல்கள் தவறானவை அல்லது தேர்ந்தெடுத்து மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன என்று ஆதாரங்கள் கூறுகின்றன.

RN Ravi MK Stalin

அயல்நாட்டு நேரடி முதலீடு (FDI) குறித்த லோக் பவனின் கூற்றில் பல தவறுகள் இருப்பதாக கூறப்படுகிறது. அயல்நாட்டு நேரடி முதலீட்டில் நான்கு ஆண்டுகளுக்கு முன் நான்காவது இடத்தில் இருந்த தமிழ்நாடு, தற்போது ஆறாவது இடத்தைத் தக்கவைக்கப் போராடுகிறது என அறிக்கை கூறியது. இருப்பினும், தொழில் மேம்பாட்டுத் துறையின் சமீபத்திய தரவிற்கிணங்க, 2026 நிதியாண்டின் ஏப்ரல்-செப்டம்பர் காலத்தில் தமிழ்நாடு $3.5 பில்லியன் FDI பெற்று, மாநிலங்களில் மூன்றாவது இடத்தில் உள்ளது. 2022 நிதியாண்டில் நான்காம் இடத்திலும், ஓராண்டு முன் ஆறாம் இடத்திலும் இருந்தது.

ஆளுநர் மாளிகையின் தவறான தகவல்கள்

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) பற்றிய தரவுகளிலும் முரண்பாடுகள் உள்ளன. இந்தியாவில் 55 மில்லியன் MSMEகள் இருப்பதாகவும், அதில் நான்கு மில்லியன் தமிழ்நாட்டில் இருப்பதாகவும் அறிக்கை கூறியது. ஆனால் மத்திய MSME அமைச்சகத்தின் தரவுத்தளத்தின்படி, இந்தியாவில் 75 மில்லியன் MSMEகள் பதிவாகியுள்ளன. இதில் ஆறு மில்லியன் தமிழகத்தில் உள்ளன, இது மாநில அளவில் மூன்றாவது பெரிய எண்ணிக்கையாகும்.

தற்கொலைகள் குறித்த லோக் பவன் அறிக்கை தவறான தகவல்களைக் கொண்டிருந்தது. தமிழ்நாடு ஒரு வருடத்தில் 20,000 தற்கொலைகளைப் பதிவு செய்து, 'இந்தியாவின் தற்கொலை தலைநகரம்' என அறிக்கை குறிப்பிட்டது. ஆனால் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) 2023 தரவின்படி, மகாராஷ்டிராவில் தமிழ்நாட்டை விட அதிக தற்கொலைகள் பதிவாகின. 2013 முதல் 2023 வரை தற்கொலை எண்ணிக்கையில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் இருப்பது கவலைக்குரியது என்றாலும், 'தற்கொலைத் தலைநகரம்' எனக் குறிப்பிடுவது கேள்விகளை எழுப்புகிறது.

போதைப்பொருள் வழக்குகள் குறித்தும் லோக் பவன் அறிக்கை கவனம் செலுத்தியது. போதைப் பொருள் தடுப்புச் சட்டம் (NDPS) தொடர்பான வழக்குகள் தமிழ்நாட்டில் ஏறக்குறைய 100% அதிகரித்துள்ளன (2018-20ல் 13,450லிருந்து 2021-23ல் 27,300 ஆக). எனினும், பிற மாநிலங்களில் இதைவிடக் கடுமையான உயர்வு இருந்தது. அசாமில் 260%, தெலங்கானாவில் 220% அதிகரிப்புடன், கேரளா, கர்நாடகா, பீகார், ஆந்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் 125% முதல் 180% வரை இதேபோன்ற உயர்வு காணப்பட்டது.

POCSO சட்டம் வழக்கு

POCSO சட்டம் வழக்குகளின் அதிகரிப்பு குறித்த கூற்று, தெளிவற்ற கால அளவைக் கொண்டுள்ளது. இளவயதினரைத் தண்டிக்க இச்சட்டம் குடும்பங்களால் 'ஒரு கருவியாகப்' பயன்படுத்தப்படுவதாக உச்ச நீதிமன்றம் அண்மையில் குறிப்பிட்டது, இது அதிக எண்ணிக்கைகள் மீது சந்தேகங்களை எழுப்புகிறது. தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதாக அறிக்கை குறிப்பிட்டாலும், NCRB தரவுகள் (2018-2023) தமிழகம் வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளில் எட்டாவது முதல் பதின்மூன்றாவது இடங்களுக்குள் இருப்பதைக் காட்டுகிறது. இந்த உயர்வு பிற மாநிலங்களிலும் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+