சிறந்த மனிதநேயவாதி.. அர்ப்பணிப்பு மிக்க தலைவர்.. விஜயகாந்த் மறைவுக்கு ஆளுநர் ஆர்என் ரவி இரங்கல்
சென்னை: சிறந்த நடிகரும், அர்ப்பணிப்புமிக்க தலைவரும், சிறந்த மனிதநேயவாதியுமான விஜயகாந்த் மறைவு ஆழ்ந்த வேதனை அளிக்கிறது என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் இன்று காலை காலமானார். விஜயகாந்த் மறைவு செய்தியை கேட்டு தொண்டர்களும், ரசிகர்களும் கதறி அழுதனர். விஜயகாந்த் மறைவையடுத்து அவரது கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். திரைத்துறை மற்றும் அரசியல் பிரமுகர்களும் விஜயகாந்திற்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

அரசியலிலும் சினிமா துறையிலும் தனி முத்திரை பதித்து தனக்கென ஒரு அசைக்க முடியாத இடத்தை பிடித்து இருந்த கேப்டன் விஜயகாந்த், யாராலும் நிரப்ப முடியாத ஒரு வெற்றிடத்தை விட்டு சென்றுள்ளார். இந்த நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி, சிறந்த நடிகரும், அர்ப்பணிப்புமிக்க தலைவரும், சிறந்த மனிதநேயவாதியுமான விஜயகாந்த் மறைவு ஆழ்ந்த வேதனை அளிப்பதாக இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் ரவி வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், "சிறந்த நடிகரும், அர்ப்பணிப்புமிக்க தலைவரும், சிறந்த மனிதநேயவாதியுமான திரு. விஜயகாந்த் அவர்களின் மறைவு ஆழ்ந்த வேதனை அளிக்கிறது. சினிமா, அரசியல், சமூக சேவை ஆகியவற்றில் அவர் வழங்கிய அளப்பரிய பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும். எனது பிரார்த்தனைகள் அவரது குடும்பத்தினருடனும் எண்ணற்ற ஆதரவாளர்களுடனும் உள்ளன. ஓம் சாந்தி!" என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications