வங்கிக் கணக்கில் மேலும் ரூபாய் 6,000.. BLO ஊதியம் டபுள் மடங்கு ஆனது.. ஊக்கத்தொகையும் உயர்வு!
சென்னை: வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் (BLO) ஊதியத்தை மேலும் ரூபாய் 6,000 உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, BLO-க்களின் ஆண்டு ஊதியம் ரூபாய் 6,000-ல் இருந்து ரூபாய் 12,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஊக்கத் தொகையை ரூபாய் 2,000 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. BLO ஊதியம் மற்றும் ஊக்கத் தொகை உயர்வுக்காக ரூபாய் 99 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டசபை தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது. இப்பணியில் வீடு வீடாக படிவங்களை வழங்குவது, பூர்த்தி செய்த படிவங்களை பெறுவது, இறந்தவர்கள், வேறு இடங்களுக்கு குடியேறிச் சென்றவர்களை கண்டறிந்து, அவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவது ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
தமிழகத்தில் 6.41 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில், எஸ்.ஐ.ஆர் பணிகளை மேற்கொள்ள அரசு அலுவலர்கள் 68,464 பேர் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக நியமிக்கப்பட்டனர். தேர்தல் ஆணையம் பிஎல்ஓக்களின் ஆண்டு ஊதியம் மற்றும் ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்குமாறு அனைத்து தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டது.
அதனடிப்படையில் தமிழகத்தில் பிஎல்ஓக்களின் ஆண்டு ஊதியம் ரூ.6 ஆயிரத்திலிருந்து, ரூ.12 ஆயிரமாகவும், பிஎல்ஓ மேற்பார்வையாளர்களுக்கு ரூ.12 ஆயிரத்திலிருந்து ரூ.18 ஆயிரமாகவும், பிஎல்ஓக்களுக்கான ஊக்கத்தொகை ரூ.1000-ல் இருந்து ரூ.2 ஆயிரமாகவும் உயர்த்தி தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அரசாணை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் (BLO) ஊக்கத் தொகையை ரூபாய் 2,000 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. BLO ஊதியம் மற்றும் ஊக்கத் தொகை உயர்வுக்காக ரூபாய் 99 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications