அரசு ஊழியர்கள் ,ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்! அக்டோபர் 1 முதல் அமலாகிறது ஈட்டிய விடுப்பு சரண் நடைமுறை
சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஈட்டிய விடுப்பு சரண்டர் இந்த ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலாகும் என சொல்லப்பட்ட நிலையில் தற்போது முன்கூட்டியே அமலாகிறது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் அறிவித்திருந்தனர். அவர்களது கோரிக்கைகளில் முக்கியமான மீண்டும் ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்ய அனுமதித்து பணப்பலன் வழங்க வேண்டும் என்பதுதான்.

இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதாக, பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். அதன்படி 15 நாட்கள் வரை விடுப்பை சரண் செய்து பணப்பலன்களை பெறலாம்.
முன்னதாக கொரோனா காலகட்டத்தில் அரசுக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளிக்கும் வகையில் அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் நடைமுறை நிறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஈட்டிய விடுப்பு சரண் முறையை மீண்டும் அமல்படுத்த கோரி அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். கடந்த ஏப்ரல் மாதம் தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கலின் போது முதல்வர் ஸ்டாலின் விதி எண் 110 இன் கீழ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
அப்போது முதல்வர் உரையில் 1 - 4 - 2026 முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 15 நாட்கள் வரை ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணபயன் பெறலாம் என அறிவித்தார். இதனால் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் மகிழ்ச்சி அடைந்தாலும் இந்த நடைமுறையை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டது.
இந்த நிலையில்தான் ஈட்டிய விடுப்பு சரண் இந்த ஆண்டே வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. பட்ஜெட்டில் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது முன்கூட்டியே அமலாகிறது.
-
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
ஆமா.. தமிழக சட்டசபை தொகுதிகள் 234 தான் என நிர்ணயிக்கப்பட்டது எப்படி? ஏன் 300 இல்லை? சுவாரசியம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி












Click it and Unblock the Notifications