ஜனவரி மாதம் தமிழ்நாடு முழுக்க திருக்குறள் நிகழ்வுகளை நடத்த தமிழக அரசு ஆணை.. சிறப்பு அலுவலர் நியமனம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் திருக்குறள் சார்ந்த பல்வேறு நிகழ்வுகளை மாநிலம் முழுவதும் நடத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. திருக்குறள் சார்ந்த நிகழ்வுகளை ஒருங்கிணைத்து கண்காணிக்க சிறப்பு பணி அலுவலராக வீ.ப.ஜெயசீலன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். திருக்குறள் சார்ந்த நிகழ்வுகளை நடத்த ரூ.80 லட்சம் ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
உலகப் பொதுமறை திருக்குறள், அனைவரும் படித்தறிய வேண்டியது. திருக்குறள், மனிதனை மேன்மைப்படுத்தக்கூடியது, நல்லறத்தைப் போதிக்கக்கூடியது. திருக்குறளை மக்கள் மத்தியில் மேலும் மேலும் பரவலாக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், இனி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் திருக்குறள் சார்ந்த பல்வேறு நிகழ்வுகளை மாநிலம் முழுவதும் நடத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.













Click it and Unblock the Notifications