டைட்டன் நிறுவனம் தொடங்கியதில் முக்கிய பங்கு வகித்த தமிழக அரசு.. டிட்கோ சாதனை.. தெரியுமா உங்களுக்கு
சென்னை: உலக அளவில் இன்று முன்னணியில் இருக்கக் கூடிய நிறுவனமாக டைட்டன் உள்ளது. இந்த நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரராக இருப்பது தமிழக அரசின் டிட்கோ- தான் என்பது உங்களுக்கு தெரியுமா? டைட்டன் நிறுவனம் ஓசூரில் தொடங்கப்பட்டது முதல் டிட்கோ முதலீடு செய்தது எப்படி என்பது பற்றிய சுவாரசிய தகவல்களை இங்கே பார்க்கலாம்.
இன்று உலகம் முழுவதும் பல நிறுவனங்களின் கைக்கடிகாரங்கள் பிரபலமாக உள்ளன. அவற்றில் முக்கியமான கைக்கடிகார நிறுவனங்களில் ஒன்று டைட்டன். டாடா நிறுவனத்தின் தயாரிப்பான டைட்டன் கைக்கடிகாரங்கள் உருவாவதற்கு தமிழ்நாடு அரசுதான் காரணம் என்பது தெரியுமா? இதுபற்றிய சுவாரசியமான தகவல்கள் வருமாறு:-

டிட்கோவுக்கு மட்டும் உரிமம்
1970களில் 'லைசன்ஸ் ராஜ்' உச்சத்தில் இருந்த கால கட்டம் அது. நமது நாட்டில் அப்போது, மத்திய அரசு நிறுவனமான ஹெச்.எம்.டி எனப்படும் ஹிந்துஸ்தான் மெஷின் டூல்ஸ் மட்டுமே கடிகாரங்களைத் தயாரிக்க உரிமம் பெற்றிருந்தது. சிறிய நிறுவனங்கள் உள்ளூர் அளவில் தயாரித்துக்கொள்ளலாம்.
பெரிய நிறுவனங்கள் எதற்கும் கடிகாரம் தயாரிக்க அனுமதி இல்லாமல் இருந்தது. அப்போது டாடா நிறுவனம் கடிகாரம் உற்பத்தியில் களம் இறங்க திட்டமிட்டது. ஆனால், உரிமம் கிடைக்கவில்லை. இதனால், தமிழக அரசின் தொழில் மேம்பாட்டு கழகமான டிட்கோவுடன் கை கோர்க்க திட்டமிட்டது.
அந்த சமயத்தில் கை கடிகாரங்களை தயாரிக்கும் நிறுவனம் அமைப்பதற்காக பிரான்சு நிறுவனம் ஒன்றுடன் தொழில் நுட்ப பரிமாற்றத்திற்காக பேசிக்கொண்டு இருந்தது. அப்போது டாடா நிறுவனத்திடம் இது குறித்து டிட்கோ பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. வாட்ச் தயாரிப்பில் ஆர்வமாக இருந்த டாடா நிறுவனமும் இந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்தது. ஆனால்,வாட்ச் தயாரிப்பில் டிட்கோவுக்கு மட்டும் உரிமம் வழங்கப்படும் என்று மத்திய அரசு கூறியது.
ஓசூரில் ஆலையை தொடங்கியது
இதையடுத்து, டாடா தனது பெயரை குறிப்பிடாமல் மற்றொரு பெயரில் விண்ணப்பம் செய்தது. உரிமம் கிடைத்த பிறகு தமிழ்நாடு மற்றும் டாடா நிறுவனத்தின் பெயரை சேர்த்து டைட்டன் என்ற பெயரில் ஓசூரில் ஆலையை தொடங்கியது. டைட்டன் நிறுவனத்தில் மிகப்பெரிய பங்குதாரராக டிட்கோ உள்ளது. டிட்கோவிடம் 27.88 சதவீத பங்குகள் உள்ளன. டாடா குழுமத்திடம் 25.02 சதவீத பங்குகள் உள்ளன.
ஒரு பங்கை கூட விற்பனை செய்யவில்லை
டைட்டன் நிறுவனத்திற்காக டிட்கோ வழங்கியது என்னவென்றால், உரிமம், ஓசூரில் தொழிற்சாலைக்கான இடம், உள்ளூர் நிர்வாகத்தின் உதவி ஆகியவற்றை வழங்கியது. டாடா நிறுவனம் செய்தது என்னவென்றால், முதலீடு, தொழில் நுட்பம், மேலாண்மை ஆகியவற்றை மேற்கோண்டது. ஒது ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் இல்லை. தொழிற்துறை கூட்டமைப்பாக இருந்தது.
மேனேஜ்மேண்ட் என்று பார்த்தால் டிட்கோ நிறுவனம் சேர்மனை நியமனம் செய்தது. டாடா மேலாண்மை இயக்குநரை நியமித்தது. இருவருக்குமே அவரவர் பொறுப்புகள் எது என்று வரையறுக்கப்பட்டதால் ஈகோ பிரச்சினைக்கோ தலையீடுகளுக்கோ வழி இன்றி சுமூகமாக இயங்கியது. டைட்டன் நிறுவனம் வளர வளர பங்குகள் விற்பனை செய்யப்பட்டன. ஆனால் டிட்கோ ஒரு பங்கை கூட விற்பனை செய்யாமால் இருந்தது.
நெட்டிசன்கள் பாராட்டு
அசுர வளர்ச்சி பெற்ற டைட்டன் நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு 3.2லட்சம் கோடியாக உள்ளது. இதில், டிட்கோவின் 27.88 சதவீத மதிப்பு 89 ஆயிரம் கோடியாகும். டைட்டன் நிறுவனத்தின் 25.02 சதவீத பங்கு மதிப்பு 80 ஆயிரம் கோடியாகும். 10 கோடியில் இருந்து 89 ஆயிரம் கோடியாக டிட்கோவின் முதலீடு 40 ஆண்டுகளில் உயர்ந்துள்ளது. 90 ஆயிரம் கோடிகள் + டிவிடண்ட்களை டிட்கோ ஈட்டியுள்ளது.
டைட்டன் உருவான நிகழ்வு சமூக வலைத்தளங்களில் தற்போது வைரல் ஆகியுள்ள நிலையில், டிட்கோ நிறுவனத்தின் திறன்மிகு செயல்பாடு உள்ளிட்டவற்றை ஈர்க்கும் வகையில் இந்த நிகழ்வு அமைந்துள்ளதாக நெட்டிசன்கள் பலரும் பாராட்டி பதிவிட்டு வருகிறார்கள்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications