முருகன் மாநாட்டைத் தொடர்ந்து ”அம்மன் மாநாடு” நடத்த நடவடிக்கை எடுப்போம்; அமைச்சர் சேகர்பாபு
சென்னை: தமிழ்நாட்டில் முருகன் மாநாடு நடத்தப்பட்டதைப் போல தமிழ்நாடு அரசின் இந்துசமய அறநிலையத்துறை சார்பாக அம்மன் மாநாடு நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு முருகன் மாநாடு நடத்தியதே தவறு என ஆளும் திமுகவின் கூட்டணி கட்சிகள் கொந்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் அம்மன் மாநாட்டை நடத்தப் போவதாக அறிவித்துள்ளது புதிய சர்ச்சையாக வெடித்துள்ளது.
பழநியில் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக 2 நாட்கள் முருகன் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டிருக்கின்றன.

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை என்பது கோவில் நிர்வாகத்துக்கானதே தவிர, இந்து மதத்தைப் பரப்புகிற பணிகளை செய்யக் கூடாது என திமுகவின் கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. திமுகவை தொடர்ந்து ஆதரிக்கும் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஆகியவையும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. முருகன் மாநாட்டின் சர்ச்சைக்குரிய தீர்மானங்களை இந்துசமய அறநிலையத்துறை திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் முருகன் மாநாட்டைத் தொடர்ந்து "அம்மன் மாநாடு" நடத்தப் போவதாக தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் சேகர் பாபு கூறியதாவது: திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அம்மன் திருக்கோவில்களில் முதன் முதலில் 108 சுமங்கலி பூஜை நடத்தப்பட்டது. அம்மன் கோவில்களில் விளக்கு பூஜையை தொடங்கியது இந்த ஆட்சி. விளக்கு பூஜைக்கு ஒருவருக்கு ரூ1,000 என செலவு வைத்துள்ளோம். மாதந்தோறும் 108 பெண்களுக்கு 17 திருக்கோவில்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அம்மன் கோவில்களைப் பொறுத்தவரை இந்த் ஆட்சி அதிக அக்கறையோடு, அம்மன் கோவில் திருப்பணிகளை மேற்கொண்டு வருகிறோம். சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு குடமுழுக்கு நடத்தியது இந்த ஆட்சிதான். ஆகையால் அம்மன் மாநாடு நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications