Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் கிடைக்கும் இந்தப் பணம் எனக்குப் பல வழிகளில் பயன்படுகிறது. பேருந்து போக்குவரத்துக்கு, நோட்டுப் புத்தகங்கள் வாங்க பயன்படுகிறது. என் பெற்றோரின் குடும்பச் செலவுக்கும் பயன்படுகிறது. படிக்கும்போதே சம்பாதிப்பது போன்ற உணர்வு எனக்கு வருகிறது. அதைவிட மனதில் ஒரு தன்னம்பிக்கை பிறக்கிறது. இந்தத் திட்டத்தை உருவாக்கிய தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலின் ஐயா இருப்பிடம் நோக்கி என் கரங்கள் குவிந்து நன்றியை செலுத்துகின்றன" - இப்படி நெகிழ்ச்சியுடன் கூறுவது பூர்ணா என்னும் கல்லூரி மாணவி.

இந்த மாணவி இருக்குமிடம் ரெங்கநாதபுரம், நடுப்படுகை. குடிசையின் முன்புறத்தில் 100 மீட்டர் தொலைவில் திருமலை ராஜன் ஆறு. மறுபுறம் 400 மீட்டர் தொலைவில் நடாறு. இரண்டு ஆறுகளுக்கும் இடையில் உள்ள படுகையில்தான் இந்தக் குடிசை உள்ளது. இந்தப் படுகையில் ஏறத்தாழ 35 குடும்பங்கள் உள்ளன. இந்தப் படுகை தஞ்சை மாவட்டம் கும்பகோணத்துக்கு அருகில் உள்ள பட்டீஸ்வரம் பேரூராட்சிக்கு உட்பட்டது. இந்தக் குடிசையில் இருந்து பட்டீஸ்வரம் ஏறத்தாழ நான்கு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

Tamil Nadu Higher Education

இந்தப் பகுதியில் உள்ள குழந்தைகள் பட்டீஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு நடந்து சென்றுதான் படிக்க வேண்டும். அப்படிச் சென்று படித்து பன்னிரண்டாம் வகுப்பில் (பிளஸ் 2) தேர்ச்சி பெற்றவர்தான் பூர்ணா. பூர்ணா, தன் தந்தை பன்னீர்செல்வம், தாய் காமாட்சி, கல்லூரியில் படிக்கும் தம்பி பால சுப்பிரமணியம் ஆகியோருடன் இந்தக் குடிசையில்தான் வாழ்கின்றார். பெற்றோர் இருவரும் விவசாயக் கூலித் தொழிலாளர்கள்.

Tamil Nadu Higher Education

பள்ளிப்படிப்பை முடித்து ஏறத்தாழ 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரியில் சேர்ந்து பி.எஸ்.சி கணிதப் பாடத்தைத் தேர்வு செய்து படித்து வருகிறார். பட்டீஸ்வரத்திலிருந்து பேருந்தில் கல்லூரிக்குச் செல்கிறார். பூர்ணாவுக்கு மாதம் ரூ.1,000 (ரூபாய் ஆயிரம்) வங்கி வழியாக புதுமைப் பெண் திட்டத்தால் சென்று சேர்கிறது.

Tamil Nadu Higher Education

பூர்ணா ஓர் உதாரணம் தான். தமிழ்நாடு முழுக்கவே உயர்கல்வி பயிலும் பெண்களுக்கு திராவிட மாடல் ஆட்சியின் முன்னோடி திட்டமான புதுமைப்பெண் திட்டம் மூலமும் ஆண்களுக்கு தமிழ்ப் புதல்வன் திட்டமும் மூலமும் மாதம் 1000 ரூபாய் வழங்கப்படுகிறது. புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்களால் உயர்கல்வி பயிலும் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயன்பெறுகின்றனர்! உயர்கல்வியில் இது ஒரு புரட்சி என்றால் மிகையல்ல.

Tamil Nadu Higher Education

இந்த உயர் கல்விச் சேர்க்கையை அதிகரிக்க, புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் படி மாதம் தோறும் வழங்கப்பட்டு வரும் ஆயிரம் ரூபாய், இனி ரூ. 1500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இளைஞர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+