தட்டித் தூக்குது தமிழக அரசு.. வீடு கட்ட அனுமதிக்கு இனி அலைய வேண்டாம்! சட்டுனு முடியும் வேலை.. எப்படி?
சென்னை: தூண் தளம் மற்றும் இரண்டு தளம் கொண்ட 10 மீட்டர் வரையுள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கும் இத்திட்டத்தின்கீழ் பதிவுசெய்து உடனடியாக கட்டிட அனுமதி பெறுவதற்கு கூடுதல் வசதி இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதனையடுத்து சுயசான்று முறையில், இரண்டு மாடி வரை கட்டடம் கட்டுவதற்கான அனுமதி பெற ஆன்லைன் முறையில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என நகர், ஊரமைப்பு துறையான டிடிசிபி கூறியுள்ளது.
தமிழகத்தில் உள்ள நிலங்களில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் கட்டுவதற்கு கட்டிட அனுமதி பெற வேண்டும். கட்டிடத்தின் பரப்பளவு, உயரம் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு உள்ளாட்சி அமைப்புகள், நகர ஊரமைப்பு இயக்கமான டிடிசிபி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமான சிஎம்டிஏ ஆகியவை கட்டிட அனுமதியை வழங்கி வருகின்றன.
இந்த நிலையில் கட்டிட அனுமதி வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாகவும் தொடர் முறைகேடுகள் நடைபெறுவதாகவும் புகார் அனுப்பப்பட்டது. தற்போது அனைத்து அரசு சேவைகளும் இணையவழிக்கு மாற்றப்பட்டு மக்களுக்கு சேவை செய்யப்படும் நிலையில் கட்டட அனுமதி பெறுவதையும் இணைய வழியில் மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

கட்டிட அனுமதி
இதை அடுத்து பிப்ரவரி மாதம் இணைய வழியில் கட்டிட அனுமதி பெறுவதற்கான விண்ணப்பிக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்தது. தமிழகத்தில் 2500 சதுர அடி வரையிலான மனையில் 3500 சதுர அடி வரையில் தரைத் தளம் அல்லது தரைத் தளத்துடன் கூடிய முதல் தளம் என கட்டப்படும் குடியிருப்புகளுக்கு சுய சான்று அடிப்படையில் இணைய வழி கட்டட அனுமதி வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
ஆன்லைன் விண்ணப்பம்
இந்த நிலையில் அந்தத் திட்டம் இன்று முதல் அமலுக்கு வரும் நிலையில் இணையவழி கட்டட அனுமதி பெற http://www.onlineppa.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும், விண்ணப்பதாரர் தரும் விவரங்களின் அடிப்படையில் கட்டிட வரைபட அனுமதி உடனடியாக வழங்கப்படும் என என நகர ஊரமைப்பு இயக்கமான டிடிசிபி கூறியுள்ளது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறையின்கீழ் இயங்கும் நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் சார்பில், தமிழகத்தில் முதல்முறையாக பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் மற்றும் நடுத்தர மக்கள் ஆகியோர் இணையதளம் வாயிலாக சுயசான்றிதழ் அடிப்படையில் பயன் பெறும் வகையில் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டது.
சுயசான்று கட்டிட அனுமதி
இதன்படி, அதிகபட்சம் 2,500 சதுர அடிபரப்பளவு கொண்ட மனையிடத்தில் 3,500 சதுர அடி அளவுக்குள் கட்டப்படும் தரைத்தளம் மற்றும் முதல் தளம் கொண்ட 7 மீட்டர் வரையுள்ள குடியிருப்பு கட்டுமானத்துக்கு உடனடியாக ஒற்றைச்சாளர முறையில் கட்டிட அனுமதிகளைப் பெறும் ஒரு ஒருங்கிணைந்த புதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்தாண்டு ஜூலை மாதம் தொடங்கி வைத்தார். தற்போது இத்திட்டத்தின் மூலம் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர்.
கட்டிட அனுமதி
இத்திட்டமானது மக்களிடம் பெறும் வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் இத்திட்டத்தை மேலும் பயனுள்ளதாக்க 2025-26-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளவாறு, வாகன நிறுத்துவதற்கான சவால்களை எதிர்கொள்ளும் வகையில் தூண் தளம் மற்றும் இரண்டு தளம் (Stilt + 2 Floors) கொண்ட 10 மீட்டர் வரையுள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கும் இத்திட்டத்தின்கீழ் பதிவுசெய்து உடனடியாக கட்டிட அனுமதி பெறுவதற்கு கூடுதல் வசதி இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது" என கூறப்பட்டுள்ளது.
-
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம்












Click it and Unblock the Notifications