புத்தாண்டில் காத்திருக்கும் மெகா சர்ப்ரைஸ்.. 1500 ஆகும் மகளிர் உரிமை தொகை? லிஸ்ட் ரெடியாகுது மக்களே!
சென்னை: தமிழ்நாடு அரசி சார்பில் தமிழகத்தில் தற்போது ஒரு கோடிக்கும் அதிகமான குடும்ப தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு பட்ஜெட்டில் இந்த எண்ணிக்கை கூடுதலாக்கப்படும் எனவும், 1000 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக மகளிர் உரிமைத்தொகை உயர்த்தி வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் உலாவுகின்றன..
திமுக தலைவராக முதன்முறையாக தேர்தலைச் சந்தித்த மு.க.ஸ்டாலின் வெற்றி பெற முக்கிய காரணம், அவர் அறிவித்த மகளிருக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட மகளிர் உரிமைத் தொகை திட்டம் தான்.

தமிழகம் முழுவதும் பெரிய அளவில் இந்த திட்டம் பேசப்பட்டது. ஏன் இந்தியா முழுமைக்குமே முன்னோடி திட்டமாக இது கருதப்பட்டது. இதேபோல் அதிமுகவும் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கும் என அறிவித்தது.
மு.க.ஸ்டாலின்:
திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஆயிரம் ரூபாய் உதவித் தொகை குறித்து பெரும்பாலும் பேசினார். இதேபோல திமுக மகளிர் அணி செயலாளர் இருந்த கனிமொழி, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் தங்கள் பிரச்சாரத்தின் போது இந்த திட்டத்தை மக்களிடம் அதிக அளவில் கொண்டு சென்றனர். எதிர்பார்த்தது போல திமுக பெருவெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. தொடர்ந்து மகளிர் உரிமைத்துறை திட்டத்தில் சுமார் ஒரு கோடியே 16 லட்சம் பயனாளிகள் பயன்பெற்றனர்.
மகளிர் உரிமைத் தொகை:
மேலும் புதிதாக திருமணமானவர்கள், புதிய குடும்ப அட்டை பெற்றவர்கள், கல்லூரி படிப்பை முடித்தவர்கள் என மாதம் தோறும் ஆயிரக்கணக்கில் மகளிர் உரிமைத்தொகைக்காக புதிய விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு மாதமும் கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கான பட்டியல் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
பயனாளிகள் எண்ணிக்கை:
இந்த நிலையில் அரசின் விதிமுறைகள் பொருந்தாததால் தற்போது சுமார் ஒரு லட்சத்து 27 ஆயிரம் பயணிகள் உரிமை தொகை திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளின் எண்ணிக்கை ஒரு கோடியே 15 லட்சத்திலிருந்து ஒரு கோடியே 14 இலட்சமாக குறைந்து இருக்கிறது.
கூடுதல் பயனாளிகள்:
அதிக வருமானம், நிலம் வாங்குதல், அரசு பணிகளில் சேர்ந்தவர்கள், உயிரிழப்பு உள்ளிட்ட காரணங்களால் பயனாளிகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாகவும், பயனாளிகளின் வங்கி கணக்குகள், நிலப்பதிவுகள் , வருமான வரி கணக்குகள், வாகனப்பதிவு ஆகியவை டிஜிட்டல் முறையில் சமூக பாதுகாப்பு ஆணையரால் கண்காணிக்கப்பட்ட நிலையில் இந்த நீக்கம் இருப்பதாக தமிழக அரசு அறிவித்தது. மேலும் கடந்த அக்டோபரில் இந்த திட்டத்தின் கீழ் 1,140 கோடி வழங்கப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறியிருந்தனர்.
தமிழக பட்ஜெட் 2025:
இந்த எண்ணிக்கை கூடுதல் ஆக்கப்படும் எனவும், ஆயிரம் ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக மகளிர் உரிமைத்தொகை உயர்த்தி வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் உலாவுகின்றன. 2025-2028ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த ஆண்டு அது தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
உயர்த்தப்படும் உரிமைத் தொகை:
இந்த நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டு மாதம் தோறும் மின் கட்டணம், கல்வி கடன் ரத்து, மகளிர் உரிமைத்தொகை அதிகரிப்பு உள்ளிட்ட அறிவிப்புகள் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் பெட்ரோல் விலை குறைப்பு, சிலிண்டர் மானியம், பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்டவை குறித்த அறிவிப்பு இருக்கலாம் எனவும் கூறுகின்றனர்.
திமுக அரசு 4வது பட்ஜெட்:
தற்போது ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நான்காவது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. 2026-ல் இடைக்கால பட்ஜெட் தான் தாக்கல் செய்யப்படும் என்பதால் வரும் பட்ஜெட் கவனம் பெற்று இருக்கிறது. இந்த நிலையில் தமிழக அரசுக்கு பின்னால் மகளிர் உரிமைத்தொகை அறிவித்த பல மாநிலங்களில் 1500 ரூபாய், 2000 ரூபாய், 2500 ரூபாய் என வழங்கப்படுகிறது.
பட்ஜெட் எதிர்பார்ப்பு:
ஆனால் இந்தியாவிலேயே முதன்முறையாக இந்த திட்டத்தை அறிவித்த தமிழக அரசு ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கி வருகிறது. எனவே 2026 சட்டமன்ற தேர்தலைக் கருத்தில் கொண்டு மகளிர் உரிமைத் தொகை 1500 ரூபாயாக அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல ஏற்கனவே ரேஷன் கார்டுக்காக விண்ணப்பித்தவர்கள், மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்கள், மேல் முறையீடு செய்தவர்கள் மட்டுமல்லாடு அனைத்து மகளிருக்கும் மகளிர் உரிமைத் தொகை என்பன உள்ளிட்ட பல அறிவிப்புகள் இதில் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
"டெல்லி என்ன.. அமெரிக்காவே மிரட்டினாலும்..” டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் கொடுத்த பதில்! -
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகள்தான்! கட் அன்ட் ரைட்டாக சொன்ன ஸ்டாலின்! பெ.சண்முகம் வைத்த டிமாண்ட் -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
சென்னையின் தலையெழுத்தை மாற்றும் ப்ராஜெக்ட்.. ரெடியாகும் 'ரூட் மேப்'... எகிறப்போகும் வேகம்! -
பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுமா? சென்னையில் பீதி.. பொது சுகாதாரத்துறை விளக்கம் -
ரயில்கள் மீது கல் வீசினால் 10 ஆண்டு ஜெயில் தண்டனை.. சென்னை ரயில்வே கோட்டம் கடும் எச்சரிக்கை! -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா












Click it and Unblock the Notifications