பால்வளத்துறை அமைச்சர் நாசர் கொரோனா தொற்றால் பாதிப்பு.. வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்
தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாகவும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொது இடங்களில் நடமாடும் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். முதல்வர் மு.க ஸ்டாலின் இரண்டு தவணைகள் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்திக்கொண்டார்.

இந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. முதல்வருடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை அரசு விழாக்களில் பங்கேற்றவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிபடுத்தியுள்ளார்.

இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் #COVID19 உறுதிசெய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் என்று அமைச்சர் நாசர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications