கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்!
தமிழ்நாட்டுடன் மசகான் டாக் ஷிப்யார்டு நிறுவனம் கப்பல் கட்டுமான தளத்தை அமைக்க 15000 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டு திட்டத்தை கையெழுத்திட்டு இருந்த நிலையில் தற்போது இத்திட்டம் ஆந்திராவுக்கு சென்றுள்ளது.
இது விஜய் தலைமையிலான அரசுக்கு பெரும் பின்னடைவாக விளங்கிய நிலையில் மற்றொரு முக்கிய திட்டமான கொரியாவின் HD Hyundai நிறுவனத்தின் முதலீட்டை உறுதி செய்ய தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா கொரியாவுக்கே நேரடியாக சென்றுள்ளார்.

கீர்த்தனா சம்பத்
தமிழ்நாட்டின் புதிய தொழில் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட கீர்த்தனா சம்பத், தென் கொரியாவில் உள்ள உலகப் புகழ்பெற்ற 'எச்டி ஹூண்டாய் ஹெவி இண்டஸ்ட்ரீஸ்' (HD Hyundai Heavy Industries) நிறுவனத்தின் பிரம்மாண்ட கப்பல் கட்டும் தளத்திற்கு நேரில் சென்று கள ஆய்வு நடத்தியுள்ளார்.
விஜய் தலைமையிலான புதிய தமிழக அரசு பொறுப்பேற்ற ஒரு மாத காலத்திற்குள் இந்த அதிரடி வெளிநாட்டுப் பயணம், தூத்துக்குடி மெகா கப்பல் கட்டும் திட்டத்தை வேகமாகச் செயல்படுத்த அரசு எடுத்திருக்கும் முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது. இதேபோல் இந்த மாபெரும் திட்டத்தை எக்காரணத்தை கொண்டும் இழக்க கூடாது என்பதில் விஜய் தலைமையிலான அரசு உறுதியாக உள்ளது.
கடந்த திமுக ஆட்சியின் போது எச்டி ஹூண்டாய் உடன் தமிழ்நாடு அரசு கப்பல் கட்டுமான தளத்தை அமைப்பதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், தற்போது புதிய அரசும் இத்திட்டத்தை முழு வீச்சில் முன்னோக்கி எடுத்துச் செல்வது இந்த கொரிய பயணம் மூலம் உறுதியாகியுள்ளது.

4 பில்லியன் டாலர் முதலீடு
இந்த மெகா திட்டமானது சுமார் 4 பில்லியன் டாலர் முதலீட்டில் தூத்துக்குடியில் அமையவுள்ள ஒரு பிரம்மாண்ட 'கிரீன்ஃபீல்ட்' கப்பல் கட்டும் வளாகமாகும். உலகிலேயே கப்பல் கட்டுமானத் துறையில் முதன்மை நிறுவனமாக விளங்கும் எச்டி ஹூண்டாய், இத்திட்டத்தை செயல்படுத்துகிறது.

அமைச்சரின் கொரிய பயணம்
தென் கொரியாவின் உல்சான் பகுதியில் அமைந்துள்ள பிரம்மாண்ட கப்பல் கட்டும் தளத்திற்கு நேரில் சென்ற அமைச்சர் கீர்த்தனா சம்பத் தலைமையிலான தமிழக அரசு குழுவினர், அங்குள்ள அதிநவீன கப்பல் தயாரிப்பு இடங்களையும், டிஜிட்டல் உற்பத்தி மேலாண்மை அமைப்புகளையும் பார்வையிட்டதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வின் போது, கப்பல் கட்டுதல் மற்றும் கடல்சார் தொழில்களில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்தும், தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட உள்ள எச்டி ஹூண்டாய் நிறுவனத்தின் எதிர்கால முதலீடுகளுக்குத் தேவையான முழுமையான ஆதரவை வழங்குவது குறித்தும் அமைச்சர் கீர்த்தனா சம்பத் தலைமையிலான குழு அந்நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்யப்பட்டு உள்ளது.
மேலும் அமைச்சர் கீர்த்தனா சம்பத்-ன் பயணம் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தற்போதைய அரசு கப்பல் கட்டுமானமும், கடல்சார் வர்த்தகமும் முக்கியமானது என நம்புவதை காட்டுவதாக எச்டி ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலவரம் என்ன?
தற்போது இத்திட்டத்திற்கான உள்கட்டமைப்பு மற்றும் கொள்கை ரீதியான பணிகள் மிக வேகப்படுத்தப்பட்டு உள்ளன. தூத்துக்குடியில் ஆண்டுக்கு 2.5 மில்லியன் கிராஸ் டன் (GT) கொள்ளளவு கொண்ட இந்த மாபெரும் கப்பல் கட்டும் தளத்தை உருவாக்குவதற்காக, நிலம் வழங்குதல் மற்றும் தளம் அமைப்பது முதல் துறைமுக உள்கட்டமைப்பை மேம்படுத்துவது வரை பல்வேறு நடவடிக்கைகளைத் தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது என எச்டி ஹுண்டாய் தெரிவித்துள்ளது.
இதுமட்டுமன்றி, சர்வதேச முதலீட்டைத் தக்கவைக்கும் வகையில் சிறப்பு வரிச் சலுகைகள் மற்றும் மானியங்களை வழங்குவதற்கும் புதிய அரசு தயாராகி வருகிறது.
இத்திட்டத்திற்கான தொழில்நுட்ப-பொருளாதார சாத்தியக்கூறு அறிக்கை ஏற்கனவே வெற்றிகரமாக முடிக்கப்பட்டுவிட்ட நிலையில், தற்போது விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. மேலும், தேசிய கப்பல் கட்டும் திட்டத்தின் தற்காலிக ஒப்புதலையும் இந்தத் தூத்துக்குடி கடல்சார் கிளஸ்டர் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசுக்கு உதவும் தூத்துக்குடி
மத்திய அரசு 2047 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் ஒட்டுமொத்த கப்பல் கட்டும் திறனை ஆண்டுக்கு 4.5 மில்லியன் கிராஸ் டன்னாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில் மிகப்பெரிய விஷயம் என்னவென்றால், இந்தியாவின் ஒட்டுமொத்த இலக்கில் பாதியளவு திறனை, அதாவது 2.5 மில்லியன் கிராஸ் டன்னை இந்த ஒரே ஒரு தூத்துக்குடி தளம் மட்டுமே ஈடுகட்டப் போகிறது.
இதனால், இந்தியாவின் வணிக ரீதியான கப்பல் கட்டுமான நிலப்பரப்பையே இந்தத் திட்டம் முற்றிலும் மாற்றி எழுதப் போகிறது என்பதில் சந்தேகமில்லை.
-
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
Joseph Vijay: கோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
அதிசயத்த பாருங்களேன்.. ஜெயா டிவில ஸ்டாலின் லைவ்! வெளியேறிய விவேக்! உள்ளே வந்த திவாகரன்! பெரிய சேஞ்ச் -
ஸ்டாலின் தோற்றது விஜய்க்கு வருத்தமளித்திருக்கலாம்! ஓபனாக பேசிய ப.சிதம்பரம்! -
"தவெக ஆட்சி 6 மாதம் இல்லை.. 3 மாதமாவது தாங்குமா?" - முன்னாள் முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் -
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம்












Click it and Unblock the Notifications