சென்னையில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் ரூ.10,000 வழங்கிடுக! தமிழ்நாடு முஸ்லீம் லீக் வேண்டுகோள்!
சென்னை: புயலாலும், வெள்ளத்தாலும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதால், சென்னையில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் ரூ.10,000 வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ்நாடு முஸ்லீம் லீக் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இருசக்கர வாகனம், கார் போன்றவற்றை பழுது பார்க்க தமிழக அரசு சார்பில் சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு முஸ்லீம் லீக் விடுத்துள்ள பதிவு வருமாறு;

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மட்டும் கடந்த 45 மணி நேரத்தில் 47 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால், பெரும்பாலான சாலைகளில் வெள்ள நீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல வீடுகளில் வெள்ளநீர் சூழ்ந்து நிற்கிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ள நிலையில், 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த புயல் கடந்த எட்டு ஆண்டுகளில் சென்னை பார்க்காத அளவுக்கான அதிகனமழையை கொடுத்துள்ளது.
இந்த புயல் மற்ற புயல்களிலிருந்து சில காரணிகளால் வேறுபட்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மாநகர் பகுதி மட்டுமில்லாது புறநகர் பகுதி, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் மழை நீர் சூழ்ந்து பாதிக்கப்பட்டது. முதல் தளம் வரை மழை நீர் புகுந்தது. மின்சாரம் துண்டிக்கப்பட்டு, பால் உள்பட அத்தியாவசிய உணவுபொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
மழை சூழ்ந்த காரணத்தால், கடைகள், வீடுகள் உள்பட அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, பிரிட்ஜ், வாசிங்மெஷின் உள்பட பல்வேறு பொருட்கள் சேதம் அடைந்துள்ளது. மேலும், மாணவர்களின் புத்தகங்கள், பல்வேறு வகையான சான்றிதழ்களையும் மக்கள் இழந்து இருக்கிறார்கள்.
அதுமட்டுமின்றி, கார், இருசக்கர வாகனங்கள் பழுதுடைந்துள்ளது. 2015-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் இதே போன்ற பாதிப்பு ஏற்பட்டது. அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா அவர்கள், சான்றிதழ்களுக்கு சிறப்புமுகாம் நடத்தி வழங்கினார். அதே போல, இருசக்கர வாகனம், கார் போன்றவற்றை பழுது பார்க்கவும் சிறப்பு முகாம்களை ஏற்பாடு செய்தார். அதுபோல தமிழக முதல்வர் ஸ்டாலினும், பழுதடைந்த சான்றிதழ்களை வழங்கவும், வாகனங்கள் பழுதை நீக்க சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
மேலும், வீடுகளில் புகுந்த மழைநீரால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, பொருட்கள் சேதம் அடைந்திருக்கிறது. மழையால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழை நிவாரண நிதியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வழங்க வேண்டுமென முதல்வரை வலியுறுத்துக்கிறேன்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications