வீடுகளை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம்.. மக்களுக்கு தமிழக அரசு மிக மிக முக்கிய அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் மக்கள் வீடுகளுக்குள் இருக்க வேண்டும் என்கிற அரசின் வேண்டுகோளை கடைபிடிக்காவிட்டால் கொரேனோ நிலைமை தீவிரமாகும் என்றும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் தமிழக சுகாதரத்துறை அமைச்சகம் இன்று முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று இதுவரை 12 பேருக்கு இருப்பது உறுதி செயயப்பட்டுள்ளது. இதில் மதுரையைச் சேர்ந்த ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது இவர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர் அல்ல. எனினும் கொரோனா இவரக்கு பாதித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் தமிழக சுகாதார துறை அமைச்சகம் மக்களுக்கு மிக முக்கியமான வேண்டுகோள்களுடன் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
இதன்படி கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நீடிப்பதால் தமிழகத்தில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம். ஈரோட்டில் ஏற்கனவே இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே அதன் அருகாமையில் உள்ள கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்ட மக்கள் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்.
மதுரையில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே மதுரை மட்டுமல்லாமல் அருகாமை மாவட்ட மக்கள் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்.
சேலத்தில் 21 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் 21 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனவே சேலம் மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம். மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதால் கொரோனா வைரஸ் பரவுகிறது. எனவே யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம். மிகமிக அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் வீடுகளை விட்டு வெளியே வரலாம். மற்றபடி வரவே வேண்டாம்.
தமிழகத்தில் மக்கள் வீடுகளுக்குள் இருக்க வேண்டும் என்கிற அரசின் வேண்டுகோளை கடைபிடிக்காவிட்டால் கொரேனோ நிலைமை தீவிரமாகும். மதுரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் மக்ககள் நிலைமையின் தீவிரத்தை உணர வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications