ஒடிசா ரயில் விபத்து..உடனே தயாரான உயர்அதிகாரிகள் குழு... டிஜிபி சைலேந்திரபாபு முக்கியமான உத்தரவு
சென்னை : ஒடிசா ரயில் விபத்து குறித்து பேசிய தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு, விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்ய காவல்துறை சார்பில் தற்போது உயர்அதிகாரிகள் குழு ஒன்றை அமைத்துள்ளோம். விபத்து தொடர்பாக தகவல்களை சேகரித்துக் கொண்டிருக்கிறோம். தகவல்கள் அடிப்படையில் நடவடிக்கை எடுப்போம் என்று கூறினார்.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே சென்னை கோரமண்டல் ரயில் விபத்தில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர் 350க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். விபத்தில் சிக்கியோரை மீட்கும் பணியில் 800 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஒடிசா அரசு தகவல் தெரிவித்துள்ளது.இந்த கோரவிபத்து காரணமாக கிழக்கு கடற்கரை ரயில்வே வழித்தடத்தில் வரும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது

விபத்தில் உயிரிழந்தோருக்கு ₹10 லட்சம், பலத்த காயம் அடைந்தோருக்கு ₹2 லட்சம், லேசான காயம் அடைந்தோருக்கு ₹50,000 நிவாரணத்தை ரயில்வே அறிவித்துள்ளது
ரயில் விபத்து நடந்த இடத்திற்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விரைந்துள்ளார்; விமானப்படையும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்தோருக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த விபத்து குறித்து பேசிய தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு, விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்ய காவல்துறை சார்பில் தற்போது உயர்அதிகாரிகள் குழு ஒன்றை அமைத்துள்ளோம். விபத்து தொடர்பாக தகவல்களை சேகரித்துக் கொண்டிருக்கிறோம். தகவல்கள் அடிப்படையில் நடவடிக்கை எடுப்போம். இதற்காக ஒடிசா மாநில ரயில்வே படையுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். அங்குள்ள ரயில்வே காவலர்கள் மூலம் விபத்தில் சிக்கியவர்களை பற்றி குடும்பத்தினர் தொடர்பு கொள்ளவும், அவர்களுக்கு வேண்டிய எல்லா உதவிகளை செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.












Click it and Unblock the Notifications