6 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. திருச்சி உட்பட 4 மாவட்டங்களுக்கு புதிய எஸ்பிக்கள் நியமனம்!
சென்னை: தமிழக அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் இன்று பொறுப்பேற்றிருக்கும் நிலையில், தற்போது 6 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக உத்தரவு வெளியாகியுள்ளது.
6 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றத்துடன், திருச்சி, பெரம்பலூர், தென்காசி, திருப்பத்தூர் என 4 மாவட்டத்திற்கு புதிய எஸ்பிக்கள் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

புதிய உத்தரவின்படி, காத்திருப்போர் பட்டியலில் இருந்த செந்தில் குமாரி, சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து பிரிவு ஐஜியாக மாற்றப்பட்டிருக்கிறார். அதேபோல, ஊழல் தடுப்பு கண்காணிப்பு துறை எஸ்பி டோங்கரே பிரவின் உமேஷ், திருச்சி மாவட்ட எஸ்பியாக மாற்றப்பட்டிருக்கிறார்.
இதுதவிர, திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி சியாமளா தேவி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு எஸ்பியாகவும், கோவை நகர போக்குவரத்து துணை ஆணையராக இருந்த அசோக் குமார், தென்காசி மாவட்ட எஸ்பியாகவும், ஓசூர் சப்டிவிசன் ஏஸ்பி அக்சய் அனில் வக்காரே பதவி உயர்வு பெற்று திருப்பத்தூர் மாவட்ட எஸ்பியாகவும் மாற்றப்பட்டிருக்கின்றனர்.
மேலும், நாகர்கோவில் சப்டிவிசன் ஏஎஸ்பி லலித் குமார் பதவி உயர்வு பெற்று பெரம்பலூர் மாவட்ட எஸ்பியாகவும் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர். திருச்சி மாவட்ட எஸ்பியாக இருந்த செல்வநாக ரத்தினம், பெரம்பலூர் மாவட்ட எஸ்பியாக இருந்த பிரபாகர் ஆகியோர் மாற்றப்பட்டு எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை.
-
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
சட்டம் ஒழுங்கில் பெரிய ஓட்டை.. நாமக்கல்லில் தலைதூக்கிய துப்பாக்கி கலாச்சாரம்! 20 சவரன் நகை அபேஸ்! -
கயத்தாறு சம்பவம்.. ஆணவக்கொலை அல்ல! காவல்துறை அளித்த விளக்கம்! வதந்தி பரப்ப வேண்டாம் என வார்னிங் -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்!












Click it and Unblock the Notifications