Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிப்புக்கும்.. தேர்தல் தேதிக்கும் இவ்வளவு கேப் ஏன்? கிளம்பும் சந்தேகம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் ஏப்.23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், பக்கத்தில் இருக்கும் புதுச்சேரிக்கு ஏப்.9ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிப்புக்கும், தேர்தல் தேதிக்கும் இடையே 34 நாட்கள் வித்தியாசம் ஏன் என்று பலரும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை, திமுக தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஒருபுறமும், மறுபுறம் அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியும் தேர்தலை எதிர்கொள்கிறது. இது தவிர தமிழக வெற்றிக்கழகம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் தனியே களம் காண்கின்றன.

Tamil Nadu Polls 2026

ரெடியான திமுக

திமுக கூட்டணியை பொறுத்தவரை, 26 கட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. இன்று வரை, காங்கிரஸ் 28+1, மதிமுக 4, ஐயுஎம்எல் 2, எம்என்கே 2, கொங்கு மக்கள் தேசிய கட்சி 2 ஆகிய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு உறுதியாகியிருக்கிறது. விசிக, இடதுசாரிகள், மநீம உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிகள் இன்னும் ஒதுக்கப்படவில்லை. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இப்படி இருக்கையில், மறுபுறம் என்டிஏ கூட்டணி இன்னும் முழுமையடையவில்லை.

இழுபறியாகும் என்டிஏ கூட்டணி

குறிப்பாக விஜய்யை கூட்டணிக்குள் இழுக்க தொடர்ந்து முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், புதுச்சேரியில் கூட்டணி இறுதி செய்யப்பட்டுவிட்டது. எனவேதான் ஏப்.9 அன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் விஜய் இன்னும் கூட்டணிக்குள் வராததால், கூடுதல் காலம் தேவைப்படுவதாலும், ஏப்.23ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது என்று விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

பெரிய இடைவெளி

புதுச்சேரியில், தேர்தல் தேதி அறிவிப்புக்கும் தேர்தல் தேதிக்கும் இடையில் வெறும் 24 நாட்கள்தான் இருக்கின்றன. அதுவே, தமிழ்நாட்டில் 34 நாட்கள் இருக்கின்றன.

  • தமிழகத்தில் வேட்புமனுத்தாக்கல் தேதி - மார்ச் 30
  • வேட்புமனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் - ஏப்.6
  • வேட்புமனு பரிசீலனை - ஏப்.7
  • மனுத்தாக்கல் திரும்ப பெற கடைசி நாள் - ஏப்.9
  • வாக்குப்பதிவு நாள் - ஏப்.23
  • வாக்கு எண்ணிக்கை நாள் - மே.4

சந்தேகம் கிளப்பிய ஜோதிமணி எம்பி

தேர்தல் தேதி இடைவெளி குறித்தும், பொதுவாக புதுச்சேரிக்கும், தமிழ்நாட்டுக்கும் இந்த முறை ஒரே நாளில் தேர்தல் தேதி அறிவிக்காதது குறித்தும், காங்கிரஸ் எம்பி ஜோதிமணி சந்தேகம் கிளப்பியிருக்கிறார். இது குறித்து தனது x பக்கத்தில் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில்,

"பொதுவாக தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரியில் ஒரே நாளில் தான் தேர்தல் நடப்பது வழக்கம். இந்தமுறை தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இரண்டு வாரங்களுக்குப் பிறகு நடக்கிறது. இதற்கான காரணத்தை அறிந்துகொள்வது ஒன்றும் கஷ்டமில்லை. பாஜகவின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்பது தேர்தல் தேதியிலிருந்தே தெளிவாகத் தெரிகிறது. எல்லாவற்றையும் எதிர்கொள்கிற அறிவும், அரசியல் புரிதலும் தமிழ்நாட்டு மக்களுக்கு உண்டு. இந்தியா கூட்டணிக்கும் உண்டு" என்று தெரிவித்திருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+