பட்டா மாறுதலா? பத்திரத்தை பதிவு செய்ய போறீங்களா? வேகம் எடுத்த பதிவுத்துறை.. வேலையும் ஆரம்பம்.. சபாஷ்
சென்னை: பத்திரப்பதிவு செய்ய போறீங்களா? சார்பதிவாளர் அலுவலகங்களை சீரமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதால், இதற்கான பணிகள் ஆரம்பமாகியிருக்கிறதாம். இதுகுறித்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.
அனைத்து துணை பதிவுத்துறை தலைவர்களுக்கும் கூடுதல் சீட்டு பதிவாளர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருக்கிறார்.. அதில் உள்ளதாவது:

பதிவுத்துறை: "பதிவுத்துறையில் தற்போதுள்ள 56 பதிவு மாவட்டங்களில் 582 சார்பதிவாளர் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. பதிவுத்துறை தொடர்பாக கடந்த ஏப்.5-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், சார்பதிவாளர் அலுவலகங்களை சீரமைக்க முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி, துணை பதிவுத்துறை தலைவர்கள் தங்கள் மண்டலத்துக்கு உட்பட்ட அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களையும் ஆய்வு செய்து, மிக அதிகமாக ஆவணங்கள் பதிவாகும் அலுவலகங்களை கண்டறிந்து, அதிலுள்ள கிராமங்களை பிரித்து, அருகில் உள்ள பதிவாளர் அலுவலகங்களுடன் இணைப்பது, புதிய அலுவலகங்களை தோற்றுவிப்பது, அதிக ஆவணங்கள் பதிவு நடைபெறாத அலுவலகங்களை, அருகில் உள்ள அலுவலகங்களுடன் இணைப்பது குறித்த பரிந்துரைகளை வரும் ஏப்.29-க்குள் அனுப்ப வேண்டும்.
ஆவணங்கள்: அதில், அலுவலகம் தொடங்கப்பட்ட நாள், கிராமங்கள் விவரம், வருவாய் வட்டம், வருவாய் மாவட்டம், கிராம வாரியாக கடந்த 3 நிதியாண்டுகளில் பதிவான ஆவணங்களின் எணணிக்கை, 3 ஆண்டுகளின் சராசரி, வருவாய் மற்றும் சராசரி வருவாய், கிராமங்களுக்கும், சார்பதிவாளர் அலுவலகத்துக்கும் இடையிலான தூரம், குறைந்த ஆவணப்பதிவுள்ள அலுவலகங்களை அருகில் உள்ள அலுவலகத்துடன் இணைக்க வேண்டி உள்ளது.
அப்படி இணைக்கும்போது, அந்த அலுவலகங்களின் கீழ் வரும் கிராமத்துக்கும், இணைக்கப்படும் அலுவலகத்துக்குமான தூரம், அவ்வாறு இணைக்கப்படும்போது எதிர்பார்க்கப்படும் பதிவு எண்ணிக்கை, வருவாய், புதிய அலுவலகம் தோற்றுவிக்க வேண்டியிருந்தால், கிராமங்களுக்கும் அலுவலகம் அமைவிடத்துக்கும் இடையிலான தூரம், எதிர்பார்க்கப்படும் ஆவணப்பதிவு எண்ணிக்கை, வருவாய், தேவையான பணி அமைப்பு விவரம், தொடரும், தொடரா செலவினம் உள்ளிட்ட விவரங்களை அறிக்கையாக அளிக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
சீரமைப்பு பணிகள்: எண்ணிக்கை, வருவாய், தொலைவு அடிப்படையில், சார்பதிவாளர் அலுவலகங்களை இணைத்தல், பிரித்தல் உள்ளிட்ட சீரமைப்புக்கான அடிப்படை பணிகளை பதிவுத்துறை தொடங்கியிருப்பது, மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications