Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு.. சென்னையில் படுமோசம்! வெளியான அதிர்ச்சி தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்துள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது என்றும், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த 2025 ஆம் ஆண்டு பாதிப்பு அதிகரித்துள்ளதும் தெரியவந்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே ஆண்டில் புற்றுநோய் பாதிப்பு ஒரு லட்சம் எண்ணிக்கையை தாண்டி அதிரவைத்துள்ளது. இதிலும் தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னை, காஞ்சிபுரத்தில் புற்றுநோயால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த தரவுகளின்படி, தமிழகத்தில் தற்போது 1,00,097 பேருக்கு புதிதாக புற்று நோய் பாதிப்பு பதிவாகியுள்ளன.

Tamil Nadu Sees Alarming Rise in Cancer Cases Over One Lakh Registered Chennai Tops the List

பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு

பாதிப்பு எண்ணிக்கையில் திடீர் உயர்வு ஏற்பட்டுள்ளது, நோய் தடுப்பு நடவடிக்கைகள், ஆரம்ப கட்ட கண்டறிதல் மற்றும் சிகிச்சை வசதிகளின் திறன் குறித்து சுகாதாரத் துறையினரிடையே கவலையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

புற்று நோய் பாதிப்பை கண்டறிய வலுவான பரிசோதனைத் திட்டம் மற்றும் மக்களின் வாழ்க்கைமுறை மாற்றங்களும் அமல்படுத்தப்படாவிட்டால், வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

தமிழகத்தில் சென்னையில் அதிகம்

கடந்த 2020 ஆம் ஆண்டில் 68,750 ஆக இருந்த புற்று நோய் பாதிப்பு பதிவானது, 2021 ஆம் ஆண்டில் 76,968 ஆகவும், 2022 ஆம் ஆண்டில் 89,265 ஆகவும், 2023 ஆம் ஆண்டில் 92,816 ஆகவும், 2024 ஆம் ஆண்டில் 96,486 ஆகவும் உயர்ந்த நிலையில், இந்த ஆண்டு ஒரு லட்சம் எண்ணிக்கையை கடந்துள்ளது.

புற்று நோய் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது நோய்ப் பாதிப்பையும், மாவட்டங்கள் முழுவதும் ஒருங்கிணைந்த பொது சுகாதார நடவடிக்கைகளின் அவசரத் தேவையையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 8,505 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு உறுதியாகியுள்ளது.

ஆண்களுக்கு வாய் புற்றுநோய்

அதற்கு அடுத்த இடத்தில் காஞ்சிபுரத்தில் 7,295 பேருக்கு பாதிப்பு தெரியவந்துள்ளது, வேலூர் 6,525 பேருக்கும் பதிவாகியுள்ளது. நகர்ப்புறங்களில் அதிக எண்ணிக்கையில் பதிவாக மக்களின் வாழ்க்கை முறை, மாசுபாடு, மன அழுத்தம் மற்றும் தாமதமான கண்டறிதல் ஆகியவையே காரணமாக இருப்பதாகவும் சுகாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆண்களுக்கு வாய்ப் புற்றுநோய் அதிக எண்ணிக்கையில் பதிவாவதாகவும் குட்கா, புகையிலை பொருட்கள் பயன்பாடே இதற்கு பெரும்பாலும் காரணமாக உள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்த இடத்தில், பெருங்குடல் மற்றும் வயிற்றுப் புற்றுநோய்கள் உள்ளன.

பெண்களுக்கு மார்பக, கருப்பை புற்றுநோய்

பெண்களுக்கு இடையே மார்பக புற்று நோய், கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு ஆகியவை அதிக அளவில் பதிவாகியிருப்பதாகவும் தீவிர விழிப்புணர்வு மற்றும் பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டியதன் தேவையை இது சுட்டிக்காட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புற்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் முற்றிய நிலையிலேயே கண்டறியப்படுவதாகவும் இதனால், உயிர் பிழைக்கும் வாய்ப்புகள் குறைவதோடு, சிகிச்சை செலவுகள் அதிகரிப்பதாகவும் மருத்துவ நிபுணர்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.


நெல்லையில் 18 பேரில் ஒருவருக்கு..

நெல்லை மாவட்டத்தினை பொறுத்த அளவில் 18 பேரில் ஒருவருக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளதாக நெல்லை கேன்சர் சென்டர் மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர். நெல்லையில் புற்றுநோயால் பாதித்தவர்களின் எண்ணிக்கை கடந்த 2018 ஆம் ஆண்டில் 2,537 ஆக இருந்த நிலையில் கடந்த 2019-இல் 2977 ஆக அதிகரித்துள்ளது. ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதன் மூலமாக புற்றுநோயை முற்றிலும் தடுக்க முடியும் என மருத்துவ குழுவினர் தெரிவிக்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+