சென்னையில் கிட்டத்தட்ட பாதி வாக்காளர்கள் பெயர் நீக்கம்? SIR செய்யும் வேலை.. எங்கு பாதிப்பு அதிகம்?
சென்னை: தமிழ்நாடு முழுவதும் சிறப்புத் தீவிரத் திருத்தம் எனப்படும் சார் பணிகள் நடந்து வருகிறது. வெள்ளிக்கிழமை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகும் நிலையில், கிட்டத்தட்ட ஒரு கோடி வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்படும் எனத் தெரிகிறது. குறிப்பாக சென்னையில் 3ல் ஒருவர், அதாவது 35% வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்படும் எனச் சொல்லப்படுகிறது.
பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் தேர்தல் ஆணையாம் சார் எனப்படும் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளை மேற்கொண்டது. தமிழ்நாட்டில் இரண்டு முறை சார் கடைசித் தேதி நீட்டிக்கப்பட்டது. கடந்த டிசம்பர் 14ம் தேதி வரை வாக்காளர்கள் தங்கள் சார் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கக் கால அவகாசம் தரப்பட்டது. இந்தச் சூழலில் வரும் வெள்ளிக்கிழமை தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

கிட்டத்தட்ட ஒரு கோடி வாக்காளர்கள்
அதில் தமிழ்நாட்டில் சுமார் 97.4 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. "தொடர்பு கொள்ள முடியாதவர்கள்" என்ற வகையில் இவர்கள் பெயர்கள் நீக்கப்படுகிறதாம். அதிகபட்சமாக 52.6 லட்சம் (54.2%) பேர் நிரந்தர முகவரி மாற்றம் செய்தவர்கள். மேலும், 26.9 லட்சம் (27.7%) இறந்தவர்கள், 13.6 லட்சம் (13.9%) கண்டறியப்படாதவர்கள், 3.98 லட்சம் (4.1%) போலி பதிவுகள், மேலும் 16,400 (0.2%) பேர் பிற காரணங்களால் நீக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் அதிகம்
குறிப்பாக மாவட்டம் வாரியாக பார்க்கும்போது சென்னையில் தான் அதிகபட்ச வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது. சென்னையின் இப்போது 40.05 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருக்கும் நிலையில், அது 25.8 லட்சமாகக் குறையலாம். அதாவது வரைவுப் பட்டியலில் 35.6% பேர் பெயர்கள் இடம்பெறாது எனத் தெரிகிறது. அதாவது தற்போது வாக்காளர் பட்டியலில் இருக்கும் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கப்படுகிறார்கள். சுமார் 14.26 லட்சம் பெயர்கள் நீக்கப்படுகின்றன. அவற்றில் 12.23 லட்சம் (85.8%) பேர் நிரந்தரமாக முகவரி மாற்றம் செய்தவர்கள் ஆவர்.
மற்ற மாவட்டங்கள்
சென்னை மட்டுமின்றி, தமிழ்நாடு முழுக்க 10 மாவட்டங்களில் வாக்காளர் எண்ணிக்கை 15%க்கும் அதிகமாகக் குறையலாம். சென்னை புறநகராகக் கருதப்படும் செங்கல்பட்டில் 27.87 லட்சம் வாக்காளர்களில் சுமார் 7 லட்சம் பெயர்கள் நீக்கப்படும் என தெரிகிறது. அதாவது 25.18% வரை சரியலாம். சென்னைக்கு அடுத்து செங்கல்பட்டில் தான் அதிகச் சரிவு! அதேபோல திருப்பூர் (23.1%) மற்றும் கோவையிலும் (20.2%) அதிகளவில் வாக்காளர்கள் நீக்கப்படுகிறார்கள். திருப்பூரில் உள்ள 24.4 லட்சம் வாக்காளர்களில் 5.6 லட்சம் பெயர்களும், கோவையில் 32.2 லட்சம் வாக்காளர்களில் 6.5 லட்சம் பெயர்களும் நீக்கப்படலாம்.
எங்குக் குறைவு!
காஞ்சிபுரம், திருவள்ளூர், திண்டுக்கல், வேலூர், ஈரோடு, திருநெல்வேலி ஆகிய ஆறு மாவட்டங்களிலும் 15% அதிகமான பெயர்கள் நீக்கப்படுகிறது. மாநிலத்தின் 38 மாவட்டங்களில், 10 மாவட்டங்களில் மட்டுமே நீக்கப்படும் பெயர்களின் சதவீதம் 10%க்கும் குறைவாக உள்ளது. குறைந்த அளவாக அரியலூரில் 4.6% சரிவு மட்டும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் சென்னை, செங்கல்பட்டு, கோவை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், மதுரை, திருப்பூர் போன்ற நகர்ப்புற மாவட்டங்களில் தான் 'கண்டறிய முடியாதவர்கள்', 'இல்லாதவர்கள்' அல்லது 'நிரந்தரமாக முகவரி மாற்றம் செய்தவர்கள்' எனக் குறிக்கப்பட்ட வாக்காளர்களின் சதவீதம் அதிகமாக உள்ளது.
-
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications