Tamil Nadu SSLC, PLUS 2 exam result 2025: பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?
சென்னை: தமிழகத்தில் 10ஆம் வகுப்பு, 11, ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் அதன் முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
2024-2025 ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி தேர்வுகள் கடந்த மார்ச் 3 முதல் மார்ச் 25 ஆம் தேதி வரை நடைபெற்றது. தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வை 8.21 லட்சம் மாணவர்கள், 3316 தேர்வு மையங்களில் எழுதியிருந்தனர்.

அது போல் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 30 லட்சம் பேர் எழுதியிருந்தனர். தமிழகத்தில் 11 ஆம் வகுப்புக்கும் பொது தேர்வு நடத்தப்பட்டது. இந்த நிலையில் இந்த தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த ஆண்டு மே 6ஆம் தேதியும் 2023 ஆம் ஆண்டு மே 8ஆம் தேதியும் இந்த தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் இந்த ஆண்டும் மே 6ஆம் தேதி வாக்கில் முடிவுகள் வெளியாகும் என சொல்லப்படுகிறது. பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் கட் ஆஃப் மதிப்பெண்களை வைத்து கல்லூரியில் சேர மாணவர்கள் காத்திருக்கிறார்கள்.
தாங்கள் பெற்ற மதிப்பெண்களை வைத்து அரசு கல்லூரியா இல்லை தனியார் கல்லூரியில் டொனேஷன் கொடுத்து சேர்வதா என்பதை முடிவு செய்வர். எனவே மாணவர்கள் தேர்வு முடிவுகள் குறித்த அறிவிப்பை பெற DGE TN என்ற இணையத்தை பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
உங்கள் தேர்வு முடிவுகளை எப்படி பார்ப்பது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
tnresults.nic.in or dge.tn.gov.in. ஆகிய வெப்சைட்டுகளில் செக் செய்ய வேண்டும். அதில் "TN HSE +2 Result 2025" அல்லது "TN SSLC Result 2025" என்பதை கிளிக் செய்ய வேண்டும். அப்போது ஒரு பேஜ் ஓபனாகும், அதில் தேர்வு எண்ணையும் உங்கள் பிறந்த தேதியையும் கொடுக்க வேண்டும்.
அப்போது உங்களுடைய மதிப்பெண்கள் ஸ்கிரீனில் தெரியும். அதை டவுன்லோடு செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம். பிறகு பள்ளியில் ஒரிஜினல் மதிப்பெண் பட்டியல் கிடைக்கும். அதை வைத்து கல்லூரிக்கு விண்ணப்பிக்கலாம். கடந்த ஆண்டு 10ஆம் வகுப்பில் 91.55 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications