மோசமான நிலையில் தள்ளாடும் அரசு போக்குவரத்து கழகங்கள்.. தினமும் சந்திக்கும் நஷ்டம் இத்தனை கோடியா?
சென்னை: தமிழக அரசு போக்குவரத்து கழகம் தினமும் ரூ.15 கோடி நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. கடந்த 2022 - 2023-ம் நிதியாண்டில் மட்டும் ரூ.4,978 கோடி நஷ்டத்தை சந்தித்து உள்ளதாக போக்குவரத்துத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம், விழுப்புரம், மதுரை, கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர், திருநெல்வேலி என எட்டு அரசு போக்குவரத்துக் கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் டவுன் பஸ்களை இயக்கிவருகிறது. விரைவு போக்குவரத்துக்கழகம், சென்னை உள்பட பல்வேறு நகரங்களுக்கு நீண்ட தூரம் செல்லும் எஸ்இடிசி (விரைவு பேருந்து) பேருந்துகளை இயக்கி வருகிறது.

மற்ற போக்குவரத்து கழகங்கள் நகர் பகுதி முதல் கிராமங்கள் வரை மட்டுமின்றி மலைப்பகுதியிலும் பேருந்துகளை இயக்கி வருகின்றன. லாப நோக்கமின்றி ஏழை, எளிய மக்கள் அதிகளவில் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் தமிழகத்தில் பல்வேறு கிராமப் பகுதிகளில் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தமிழகத்தில் 2022-23ம் ஆண்டு நிலவரப்படி 20,127 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சுமார் 1.70 கோடி பேர் அரசு பேருந்துகளில் பயணித்து வருகின்றனர். தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் 1,16,259 பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள், பெண்களுக்கான கட்டணம் இல்லா பேருந்து சேவை, முதியவர்களுக்கான கட்டணம் இல்லா சேவை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பஸ் பாஸ் உள்ளிட்ட திட்டங்களை போக்குவரத்துக் கழகங்கள் செயல்படுத்தப்படுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் 35 லட்சம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தினமும் கட்டணமின்றி பயணிக்கிறார்கள். இதேபோல் தமிழகம் முழுவதும் சுமார் 55 லட்சம் பெண்கள் பயணிக்கிறார்கள். இதுதவிர 40 லட்சம் பொதுமக்கள் அரசு பஸ்களை பயன்படுத்தி வருகிறார்கள்.
பல்வேறு சிறப்பு திட்டங்கள் காரணமாக இலவமாக மக்கள் பயணிக்கும் நிலையில், அரசு போக்குவரத்துக் கழகங்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. தற்போது போக்குவரத்து கழகங்கள் மிகவும் மோசமான சூழலில் தள்ளாடி கொண்டிருக்கிறது.
இதுபற்றி தமிழக அரசு போக்குவரத்துத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பிலும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. "2022 - 2023-ம் நிதியாண்டில் பிப்ரவரி மாதம் வரை அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு ரூ.12,007 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதில், இயக்கம் மூலம் ரூ.6,705.69 கோடியும், இயக்கம் அல்லாதவைகள் மூலம் ரூ.5,256.89 கோடி வருவாய் கிடைத்துள்ளது. ஆனால், இந்த கால கட்டத்தில் ரூ.16,985 கோடி செலவு ஏற்பட்டுள்ளது. இதன்படி தற்போது வரை அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு இந்த நிதியாண்டில் மட்டும் ரூ.4,978.38 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்கு ரூ.452.58 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனாவிற்கு முந்தைய 2019 20-ம் நிதியாண்டில் ரூ.5230 கோடியும், ஒரு மாதத்திற்கு ரூ.435.88 கோடி இழப்பு ஏற்பட்டது. கரோனா காலத்தில் 2020-21-ம் நிதியாண்டில் ரூ.8328 கோடியும், ஒரு மாதத்திற்கு ரூ.694.58 கோடியும், 2021 - 22ம் நிதியாண்டில் ரூ.6622.21 கோடியும், ஒரு மாதத்திற்கு ரூ.551.85 கோடியும் இழப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவிற்கு பிறகு இந்த நிதியாண்டில் நஷ்டம் குறைந்துள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 5 வருடத்திற்கு முன்பு அரசு பஸ்களில் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டதால் போக்குவரத்து கழகங்களின் வருவாய் இழப்பு சற்று குறைந்த நிலையில், டீசல் விலை உயர்வு, சுங்க கட்டணம், மூலப்பொருட்கள் விலை உயர்வால் தற்போது கடும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.அரசு பஸ்களில் தினமும் பொதுமக்கள் பயணம் செய்வதன் மூலம் ரூ.25 கோடி வருவாய் கிடைத்தாலும் செலவு அதைவிட அதிக அளவில் உள்ளது,. பஸ்களை இயக்குவதற்கான டீசல் கொள்முதல், சுங்கச்சாவடி கட்டணம், ஓய்வூதியதாரர்களுக்கு செலுத்த வேண்டிய தொகை, ஒவ்வொரு ஆண்டும் சம்பள உயர்வு, அகவிலைப்படி என பல்வேறு செலவினங்களால் தினமும் ரூ.15 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
அரசு போக்குவரத்துக் கழகங்கள் சுங்கச்சாவடி கட்டணமாக மட்டும் மாதத்திற்கு அரசு போக்குவரத்து கழகங்கள் ரூ.30 கோடி செலுத்துகின்றன. சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை 13 சுங்கச்சாவடிகள் இருக்கும் நிலையில் ஒரு பஸ்சிற்கு சுங்க கட்டணமாக ரூ.5000 வரை செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு சுங்க கட்டண விலக்கு அளிக்க வேண்டும் என்றும் அப்போது தான் நஷ்டம் கணிசமாக குறையும் என்று போக்குவரத்து ஊழியர்கள் தெரிவித்தனர். ஏழை எளியோருக்காக இயக்கப்படும் அரசு பேருந்துகளுக்கு சுங்க கட்டணத்தில் விலக்கு அளிக்க வேண்டும் என்பதே போக்குவரத்து கழக ஊழியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இது ஒரு புறம் எனில், பழைய பேருந்துகளே நீண்ட நாட்களாக இயக்கப்படுகின்றன. புதிய பஸ்கள் வாங்க போக்குவரத்து கழகங்களிடம் எவ்வித நிதி ஆதாரங்களும் இல்லாத நிலை உள்ளது. தற்போதைய நிலையில் புதிய பேருந்துகள் வாங்கினால் தான் மக்கள் பலர் அரசு பேருந்துகளில் பயணிக்க ஆர்வம் காட்டுவார்கள் என்றும் அப்போதுதான் வருவாய் அதிகரிக்கும் என்றும் போக்குவரத்து கழக ஊழியர்கள் கூறுகிறார்கள். அரசு தான் அதிக அளவில் புதிய பேருந்துகள் வாங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், நஷ்டத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications