Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அசத்தல் அறிவிப்பு.. குண்டா இருப்போருக்கு "குட் நியூஸ்".. ஓடிவந்த போக்குவரத்து கழகம்.. தமிழக அரசு மாஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசு போக்குவரத்து கழகம், மக்களின் நலனை கருத்தில்கொண்டு, கூடுதல் பஸ்களை இயக்கி வருகிறது. அத்துடன், முன்பதிவு போன்ற வசதிகளிலும் மாற்றங்களை செய்து வரும் நிலையில், அடுத்த அதிரடியை பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு அத்தியாவசிய போக்குவரத்து சேவைகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் வாயிலாக குறைந்த கட்டணத்தில் அரசு வழங்கி வருகிறது. மேலும், அனைத்து கிராம பகுதிகளுக்கும் பஸ் பயண வசதியை ஏற்படுத்தி, தமிழகம் முழுவதும் தடையற்ற போக்குவரத்து சேவையையும் அளித்து வருகிறது.

Tamil Nadu Transport Corporation Major announcement and govt bus seats crises for lack of space

பயணச்சலுகை: அத்துடன், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவியர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு இலவச பஸ் பயணச்சலுகை, சாதாரண நகர கட்டண பஸ்களில், "மகளிர் கட்டணமில்லா பயணம்" திட்டம், பொதுமக்களின் தேவைக்கேற்ப புதிய பேருந்து வழித்தடங்களை தொடங்கி வைத்தல், பழைய பேருந்துகளை புதுப்பித்தல், புதிய பஸ்கள் கொள்முதல் செய்தல், சூபருந்து பணிமனைகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களையும் தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

அதுமட்டுமல்ல, கடந்தவாரம்கூட தமிழக போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருந்தார். அதாவது, பெண்களுக்கான கட்டணமில்லா பஸ் பயணத்திட்டமான, விடியல் பயணத் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதை மலைப்பகுதியில் உள்ள பெண்கள் அனைவருமே பயனடையுமாறு விரிவுபடுத்த ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார்.

அத்துடன், மலைப்பகுதிகளிலும், கட்டணமில்லா பஸ்கள் விரிவுபடுத்தப்பட உள்ளதாகவும் அறிவித்திருந்தார். மலைப்பகுதிகளிலும் இலவச பஸ் என்ற முன்னெடுப்பானது, பல்வேறு தரப்பு மக்களை திரும்பி பார்க்க வைத்தது.

கூடுதல் சீட்கள்: இந்நிலையில், அடுத்த குட்நியூஸ் அறிவித்துள்ளார் தமிழ்நாடு போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர்.. உடல் பருமனானவர்கள் சிரமமின்றி பயணிக்க புறநகர் பேருந்துகளில் 5 இருக்கைகள் குறைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.. அதாவது, அரசு போக்குவரத்து கழகத்தினால் இயக்கப்படும் புறநகர் பஸ்கள், போதிய இடைவெளியின்றி பயணிகள் பயணிக்க மிகவும் சிரமமாக இருந்து வருகிறது.

இதன்காரணமாக, உடல் பருமானான பயணிகள் புறநகர் பேருந்துகளில் நீண்ட தூரம் பயணிப்பது மிகுந்த சிரமத்தையும், உடல் அசதியையும் ஏற்படுத்தி வந்தது.

இது தொடர்பாக கோரிக்கை, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், இப்போது, புறநகர் பேருந்துகளில் உடல் பருமனானவர்கள் இலகுவாக பயணிக்க பேருந்துகளில் உள்ள இருக்கைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

மகிழ்ச்சி: இதற்கெனவே, ஒவ்வொரு பஸ்ஸிலும், 5 இருக்கைகள் குறைக்கப்படும் என்றும், விரைவில் 4 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்கப்பட்டு நிர்ணயிக்கப்பட்ட வழித்தடங்களில் இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். போக்குவரத்துத்துறை அமைச்சரின் இந்த அறிவிப்பு பயணிகள் இடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+