அசத்தல் அறிவிப்பு.. குண்டா இருப்போருக்கு "குட் நியூஸ்".. ஓடிவந்த போக்குவரத்து கழகம்.. தமிழக அரசு மாஸ்
சென்னை: தமிழக அரசு போக்குவரத்து கழகம், மக்களின் நலனை கருத்தில்கொண்டு, கூடுதல் பஸ்களை இயக்கி வருகிறது. அத்துடன், முன்பதிவு போன்ற வசதிகளிலும் மாற்றங்களை செய்து வரும் நிலையில், அடுத்த அதிரடியை பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு அத்தியாவசிய போக்குவரத்து சேவைகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் வாயிலாக குறைந்த கட்டணத்தில் அரசு வழங்கி வருகிறது. மேலும், அனைத்து கிராம பகுதிகளுக்கும் பஸ் பயண வசதியை ஏற்படுத்தி, தமிழகம் முழுவதும் தடையற்ற போக்குவரத்து சேவையையும் அளித்து வருகிறது.

பயணச்சலுகை: அத்துடன், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவியர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு இலவச பஸ் பயணச்சலுகை, சாதாரண நகர கட்டண பஸ்களில், "மகளிர் கட்டணமில்லா பயணம்" திட்டம், பொதுமக்களின் தேவைக்கேற்ப புதிய பேருந்து வழித்தடங்களை தொடங்கி வைத்தல், பழைய பேருந்துகளை புதுப்பித்தல், புதிய பஸ்கள் கொள்முதல் செய்தல், சூபருந்து பணிமனைகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களையும் தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
அதுமட்டுமல்ல, கடந்தவாரம்கூட தமிழக போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருந்தார். அதாவது, பெண்களுக்கான கட்டணமில்லா பஸ் பயணத்திட்டமான, விடியல் பயணத் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதை மலைப்பகுதியில் உள்ள பெண்கள் அனைவருமே பயனடையுமாறு விரிவுபடுத்த ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார்.
அத்துடன், மலைப்பகுதிகளிலும், கட்டணமில்லா பஸ்கள் விரிவுபடுத்தப்பட உள்ளதாகவும் அறிவித்திருந்தார். மலைப்பகுதிகளிலும் இலவச பஸ் என்ற முன்னெடுப்பானது, பல்வேறு தரப்பு மக்களை திரும்பி பார்க்க வைத்தது.
கூடுதல் சீட்கள்: இந்நிலையில், அடுத்த குட்நியூஸ் அறிவித்துள்ளார் தமிழ்நாடு போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர்.. உடல் பருமனானவர்கள் சிரமமின்றி பயணிக்க புறநகர் பேருந்துகளில் 5 இருக்கைகள் குறைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.. அதாவது, அரசு போக்குவரத்து கழகத்தினால் இயக்கப்படும் புறநகர் பஸ்கள், போதிய இடைவெளியின்றி பயணிகள் பயணிக்க மிகவும் சிரமமாக இருந்து வருகிறது.
இதன்காரணமாக, உடல் பருமானான பயணிகள் புறநகர் பேருந்துகளில் நீண்ட தூரம் பயணிப்பது மிகுந்த சிரமத்தையும், உடல் அசதியையும் ஏற்படுத்தி வந்தது.
இது தொடர்பாக கோரிக்கை, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், இப்போது, புறநகர் பேருந்துகளில் உடல் பருமனானவர்கள் இலகுவாக பயணிக்க பேருந்துகளில் உள்ள இருக்கைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
மகிழ்ச்சி: இதற்கெனவே, ஒவ்வொரு பஸ்ஸிலும், 5 இருக்கைகள் குறைக்கப்படும் என்றும், விரைவில் 4 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்கப்பட்டு நிர்ணயிக்கப்பட்ட வழித்தடங்களில் இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். போக்குவரத்துத்துறை அமைச்சரின் இந்த அறிவிப்பு பயணிகள் இடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications