அதி தீவிர புயலாக மாறியது ஃபனி.. வட தமிழகத்தில் நாளை 70 கி.மீ வேகத்தில் காற்று வீசும்.. பாலச்சந்திரன்
சென்னை: ஃபனி புயல் அதி தீவிர புயலாக மாறியுள்ளதால், நாளை முதல் வட தமிழகத்தில் மணிக்கு 70 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
வானிலை ஆய்வு மண்டல இயக்குநர் பாலசந்திரன் இன்று அளித்த பேட்டி: ஃபனி புயல், தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் தற்பொழுது சென்னைக்கு தென் கிழக்கே சுமார் 870 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது.

இது தொடர்ந்து இன்று, தீவிர புயலாகவும், நாளை அதிதீவிர புயலாகவும் வலுபெறக்கூடும்.
இது வரும் ஏப்ரல் 30ம் தேதி (நாளை) முதல் மே 1ம் தேதிவரை, வடமேற்கு திசையில் நகர்ந்து, வட தமிழகத்தின் கடற்கரை பகுதியில், 300 கிலோ மீட்டர் தொலைவு வரை வந்து பிறகு வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் நகர்ந்து செல்லும்.
மழையை பொறுத்தளவில் ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானதுவரை மழை பெய்யக்கூடும்.
காற்றை பொறுத்தளவில், வட தமிழக கடற்கரை பகுதிகளில் நாளை காலை முதல் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், சமயங்களில் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும். நாளை, மாலை முதல், 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், மாலையில் சில நேரங்களில் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும்.
ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில், தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும். எனவே, மீனவர்கள், ஏப்ரல் 29, 30 மற்றும் மே 1, 2 ஆகிய தேதிகளில் தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடற்பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள், உடனடியாக கரைக்கு திரும்ப கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications