மேகதாது: இபிஎஸ் தீர்மானம்.. ஒரு செங்கல்லை கூட கர்நாடகா எடுத்து வைக்க முடியாது.. துரைமுருகன் ஆவேசம்!
சென்னை: காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்ட தமிழ்நாட்டு அரசின் ஒப்புதலைப் பெறாமல் ஒரு செங்கல்லைக் கூட கர்நாடகா அரசு எடுத்து வைக்கவே முடியாது என தமிழ்நாடு சட்டசபையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் இறுதி நாளான இன்று காவிரி விவகாரம் குறித்து அதிமுக பொதுச்செயலாளரும் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின் மீது பேசிய எடப்பாடி பழனிசாமி, மேகதாது அணை கட்டுவது தொடர்பான பிரச்சனையில் காவிரி மேலாண்மை ஆணையத்தைக் கண்டித்து தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றவிலை என குற்றம் சாட்டினார்.

இதனைத் தொடந்து இந்த தீர்மானத்தின் மீது பேசிய பல்வேறு கட்சித் தலைவர்களும் காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கர்நாடகா அரசு கட்ட அனுமதிக்கவே கூடாது என வலியுறுத்தினர்.
இந்த விவாதங்களுக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் துரைமுருகன், காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் கடந்த 11-ந் தேதி நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கர்நாடகாவின் மேகதாது அணை குறித்து விவாதிக்கவே கூடாது என தமிழ்நாடு , கேரளா மற்றும் புதுச்சேரி அரசு பிரதிநிதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய அரசின் நீர்வளத்துறையும் மேகதாது அணை தொடர்பாக மேலாண்மை ஆணையம் விவாதிக்க கூடாது என வலியுறுத்தியது. காவிரி பிரச்சனையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புதான் இறுதியானது. காவிரி மேலாண்மை ஆணையம் என்பது தமிழ்நாட்டுக்கும் கர்நாடகத்துக்கும் இடையேயான காவிரி நதிநீர் பங்கீட்டுக்கானது மட்டுமே. தமிழ்நாடு அரசின் எதிர்ப்பை மீறித்தான் காவிரி மேலாண்மை ஆணையம் மேகதாது விவகாரத்தை விவாதிக்கிறது. தமிழ்நாடு அரசின் ஒப்புதலைப் பெறாமல் மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்ட கர்நாடகா அரசால் ஒரு செங்கல்லைக் கூட எடுத்து வைக்க முடியாது. மேகதாது அணை விவகாரத்தை கர்நாடகாவில் எந்த கட்சி ஆட்சி செய்தாலும் அரசியலுக்காக பயன்படுத்துகின்றனர். தமிழ்நாடு தொடர்ந்தும் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து வருகிறது என்றார். ஆனால் அமைச்சர் துரைமுருகனின் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்து அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications