தமிழ்நாட்டில் பிரதமர் மோடி போட்டி? இந்தியாவின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்கணும்! திமுக MP டிமாண்ட்!
சென்னை: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுவார் எனக் கூறப்படும் நிலையில், அவரிடம் ஹிந்தி மொழியைப் போல தமிழ் மொழியையும் நாட்டின் அலுவல் மொழியாக அறிவிக்கக் கோரி கோரிக்கை விடுத்துள்ளார் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி.
அண்மைக்காலமாக தமிழின் பெருமைகள் குறித்து பிரதமர் மோடி தொடர்ந்து பேசி வரும் நிலையில் இத்தகைய கோரிக்கையை வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார் கலாநிதி. அதில் அவர் கூறியிருப்பதாவது;

''தங்களது சமீபத்திய 3 நாள் அமெரிக்கப் பயணத்தின் கடைசி நாளில், வாஷிங்டன் நகரத்தில் இந்தியாவிலிருந்து அமெரிக்காவில் குடியேறியுள்ள இந்தியர்களிடம் பேசும் போது, ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில், தமிழ் கற்பிக்கும் வகையில் ஓர் இருக்கை நிறுவப்படும் என்று ஒரு அறிவிப்பினை வெளியிட்டீர்கள். மேலும் அந்த இருக்கை உலகின் மிகப் பழமையான மொழியான தமிழுக்கும், தமிழர்களின் பண்பாட்டிற்கும் உள்ள செல்வாக்கை மேலும் உயர்த்திப் பிடிக்கும் எனவும் கூறப்பட்டது.''
''மொழிகளைப் பற்றி விவாதம் நடக்கும் போதெல்லாம், நீங்கள் உலகிலேயே மிகவும் மூத்த மொழி தமிழ் என்றும் அது எங்கள் நாட்டைச் சேர்ந்தது என்றும் பெருமையுடன் கூறுவதைக் கேட்டு, தமிழர்களாகிய நாங்கள் மிகவும் பெருமை கொள்கிறோம். இந்த உண்மையை உளமார உணர்ந்துள்ள தாங்கள், வெகு சமீபத்தில் தோன்றிய இந்தி மொழியை நம் நாட்டில் அலுவல் மொழியாக இருப்பதைப் போல, தமிழ் மொழியையும் அலுவல் மொழியாகக் கூறி அறிவிப்பு வெளியிடலாமே.''
'' அவ்வாறு தங்களைச் செய்ய விடாமல் ஏதேனும் ஒரு சக்தி தடுக்கின்றதா என்று எனக்கு தெரியவில்லை. சாதி, மதம் மற்றும் சமஸ்கிருத மொழி ஆதிக்கம் என பல்வேறு சக்திகளால் ஒடுக்கப்பட்டுள்ள தமிழர்கள், தாங்கள் இது குறித்து தக்க அறிவிப்பு வெளியிடவில்லை என்றால் தங்களின் தமிழ் குறித்த பெருமையான பேச்சுக்களை நம்ப மாட்டார்கள். தாங்கள் தமிழ் குறித்து கொண்டுள்ள புரிதலை, தங்கள் செயலில் காட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.''
''மேலும் மாண்புமிகு பிரதமர் அவர்களே! தமிழ் மொழியைப் பற்றி தாங்கள் கூறும் கருத்துக்கள் உங்களது இதயத்தில் இருந்து வருமானால், இந்த உலகில் சில ஆயிரம் மக்கள் மட்டுமே பேசக்கூடிய சமஸ்கிருத மொழியின் வளர்ச்சிக்கு, தாங்கள் ஒதுக்கி செய்யும் நிதி அளவிற்குத் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் உடனடியாக நிதியை அதிகரித்து அறிவிக்க வேண்டும் என்று வேண்டி கேட்டுக் கொள்கின்றேன். ''
''மேலும், அனைத்து மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் தமிழ் மொழியை மூன்றாவது மொழியாக கற்பிக்கும் வகையில், அதாவது தாய்மொழி, ஹிந்தி அல்லது ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியைக் கற்பிக்கக் கூடிய வகையில் உடனடியாக ஒரு சட்டம் கொண்டு வாருங்கள் அல்லது குறைந்தபட்சம் ஒரு அரசு ஆணையாவது வெளியிடுங்கள் என்று தங்களிடம் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.''
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications