தமிழக பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன்
Recommended Video
சென்னை: தமிழக பாஜக தலைவர் பதவியை தமிழிசை சவுந்திரராஜன் ராஜினாமா செய்துள்ளார்.
ஒருங்கிணைந்த ஆந்திரத்தின் ஆளுநராக இருந்த நரசிம்மன் மாநில பிரிவினைக்கு பிறகும் அவரே இரு மாநிலங்களுக்கும் ஆளுநராகவே தொடர்ந்தார். இந்த நிலையில் தெலுங்கானா ஆளுநர் நரசிம்மனின் பதவிக்காலம் முடிவடைந்தது.

இதையடுத்து அந்த மாநிலத்தின் ஆளுநராக தமிழிசை சவுந்திரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்தார். தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டதை அடுத்து தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை.
கடந்த 2014-ஆம் ஆண்டு பாஜகவின் தலைவராக தமிழிசை தேர்வு செய்யப்பட்டார். இவரது பதவிக்காலம் வரும் டிசம்பரில் முடிவடையும் நிலையில் அவருக்கு ஆளுநர் பொறுப்பு வழங்கப்பட்டது.
ஆளுநர் நியமனத்தால் தமிழகத்திலிருந்து ஆளுநராகும் முதல் பெண் என்ற பெருமையையும் தெலுங்கானா மாநிலத்தின் முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையையும் தமிழிசை பெற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications