என்ன டிராமா பண்றீங்களா திருமாவளவன்? கச்சத் தீவு விவகாரத்தில் தமிழிசை காட்டம்!
Recommended Video
சென்னை: கச்சத்தீவு விவகாரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நாடகமாடுவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சாடியுள்ளார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் போட்டியிட்டார். இதில் அதிமுக வேட்பாளர் சந்திரசேகரை வீழ்த்தி திருமாவளவன் வெற்றி பெற்றார்.
இதன்மூலம் சிதம்பரம் தொகுதி மக்களவை உறுப்பினராகியுள்ளர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன். இந்நிலையில் திருமாவளவன் மற்றும் அவரது கட்சியை சேர்ந்த மற்றொரு எம்பியான ரவிக்குமார் ஆகியோர் டெல்லி சென்றனர்.
இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ.. பாஜக விரித்த வலையில் வசமாக சிக்கிய காங்கிரஸ்.. அடுத்தடுத்த டிவிஸ்ட்
வருத்தம்
இந்நிலையில் டெல்லியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த திருமாவளவன் மத்தியில் மீண்டும் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பது வருத்தமளிப்பதாக கூறினார்.
ஸ்டெர்லைட்
மேலும் தமிழகத்திற்கு எதிரான திட்டங்களான ஹைட்ரோகார்பன், நீட் தேர்வு உள்ளிட்டவற்றை ரத்து செய்யவேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கக்கூடாது என கோரிக்கை விடுத்தார்.
தமிழிசை பதில்
அப்போது கச்சத்தீவு உரிமையை தமிழகத்திற்கு மீட்டுத் தர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார் திருமாவளவன். இதற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை பதில் கொடுத்துள்ளார்.
|
என்ன நாடகம்?
இதுதொடர்பாக டிவிட்டர் பதில் அளித்துள்ள அவர், கச்சதீவை இலங்கையிடம் தாரை வார்த்த திமுக- காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி வைத்த விசிக தலைவர் திருமாவளவன் கச்சதீவை மீட்போம் என கூறுவது என்ன நாடகம்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
தாரை வார்த்தார்கள்
மேலும் கச்சத்தீவை தாரை வார்த்தது திமுக - காங்கிரஸ் கூட்டணி. அப்போதைய பிரதமராக இருந்த இந்திரா காந்தியும் முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதியும் கச்சத்தீவை இலங்கையிடம் தாரை வார்த்தார்கள். இப்போது அவர்களுடன் கூட்டணி வைத்து பதவி பெற்ற நீங்கள் கச்ச தீவை மீட்க வேண்டும் என இப்போது கூறுவது என்ன நாடகம்?
பதவி ஆசையில் மறந்துவிட்டதா?
கச்சத்தீவு, ஈழத்தமிழர்கள் பிரச்சனை எல்லாம் தேர்தல் முடிந்த பின்தான் ஞாபகத்திற்கு வருகிறதா? திமுக காங்கிரஸ் கூட்டணியில் சேர்ந்துவிட்டு பதவி ஆசையில் மறந்துவிட்டதா? இவ்வாறு அறிக்கை வாயிலாகவும் தமிழிசை திருமாவளவனை சாடியுள்ளார்.