அது என்ன சார்.. எங்க கட்சியில் பாருங்க.. மோடியவே மோடி மோடின்னுதான் கூப்பிடறாங்க.. தமிழிசை அட்டாக்!
சென்னை: " ஏதோ "சார்ன்னு என்னை கூப்பிடாதீங்கன்னு" ராகுல் சொல்றார். ஆனா எங்க கட்சியில சாதாரண தொண்டன் கூட மோடியை மோடி மோடி மோடின்னுதான் கூப்பிடறாங்க.
நேற்று ராகுல்காந்தி சென்னை வந்திருந்தபோது கல்லூரி பெண்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பெண்களிடம் ராகுல் பேசிய முதிர்ச்சியான பேச்சு, அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த விதம், எல்லாமே வெகுவாக ரசித்து பார்க்கப்பட்டது. ராகுலின் ஸ்மார்ட் லுக் கூட எல்லோராலும் ரசிக்கப்பட்டது. இதை மற்ற மீடியாக்களும் வெளிப்படுத்தின.
ஆனால் பாஜக காதில் லைட்டாக புகை வர ஆரம்பித்துவிட்டது போலும். இன்றைக்கு ராகுலின் வருகை சம்பந்தமாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் கருத்து சொல்லி இருக்கிறார்.

அரசியல்
"ராகுல்காந்தி மாணவிகள் மத்தியில் பேசியதை பற்றி நான் மறுப்பு சொல்லல. ஆனால் கல்லூரிகளை அரசியல் களமாக்க வேண்டுமா என்பதில் எனக்கு எப்பவுமே ஒரு சிந்தனை உண்டு. ஏன்னா.. படிக்கற இடத்துல நேர்மறை அரசியலைதான் தெரியப்படுத்த வேண்டுமே தவிர எதிர்மறை அரசியலை அவர்களிடம் பதிய வைக்க கூடாது.

தைரியம் இருக்கா?
3000 பெண்கள் மத்தியில் பேசுகின்ற தைரியம் மோடிக்கு இருக்கிறதா என்று கேட்கிறார். பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு போகும்போதெல்லாம் பாத்தீங்கன்னா.. அங்க லட்சக்கணக்கில் தமிழர்கள் கூடியிருக்கிறாங்க.. அவங்க முன்னாடிதான் பிரதமர் பேசியிருக்கிறார். அதேபோல, ஏதோ "சார்ன்னு என்னை கூப்பிடாதீங்கன்னு" அவர்தான் சொல்றார். ஆனா எங்க கட்சியில சாதாரண தொண்டன் கூட மோடியை மோடி மோடி மோடின்னுதான் கூப்பிடறாங்க.

என்ன பண்ணாங்க?
33 சதவீதம் கொடுப்பேன்னு சொல்றாரே? இன்னைக்குதான் இனிமேதான் ஆட்சிக்கு இவங்க வர போறாங்களா? சுதந்திரம் அடைஞ்சு 50 வருஷம் அவங்கதான் ஆட்சியில இருந்திருக்காங்க. அப்ப ஏன் 33 சதவீதத்தை கொடுக்கல? 33 சதவீதம் வேணும் என்பதில் எங்களுக்கு எந்தவித மாற்று கருத்தும் இல்லை. ஆனா நீங்க ஏன் அதிகாரத்தை கையில் வைத்து நீங்க ஏன் தரல?

பாட்டி சொன்னாங்க
நேர்மறையான விஷயங்களை எல்லாம் எதிர்மறையாக பேசி இருக்கிறார். முதல்ல, கல்லூரி மாணவிகளிடம் மோடியை தவறாக விமர்சித்து பேசியது தவறு. 1971-ல் அவங்க பாட்டி என்ன சொன்னாங்க, "வறுமையை வெளியேற்றுவோம்" என்று. அதை செய்தார்களா? ராபர்பட் வதேரா மேல கேஸ் இருக்கு? ஆனா பிரதமர் மேல இருக்கா? அவர் இந்த நாட்டுக்காக மட்டும்தானே உழைத்து கொண்டிருக்கிறார்" என்றார்.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications