Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தென் சென்னையில் தமிழிசை சவுந்திரராஜன் போட்டி! திமுக தமிழச்சி, அதிமுக ஜெயவர்தன்.. களை கட்டும் களம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மக்களவை தேர்தலுக்கான பாஜகவின் 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில் தென் சென்னை தொகுதியில் தெலுங்கானா முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்திரராஜன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா ஆளுநராகவும் புதுவை துணை நிலை ஆளுநராகவும் இருந்த தமிழிசை சவுந்திரராஜன் கடந்த மார்ச் 18-ஆம் தேதி தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் மக்களவை தேர்தலில் போட்டியிட வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியதாக தெரிகிறது. இதனால் அவரது அறிவுரையை ஏற்ற தமிழிசை, ஆளுநர் , புதுவை துணைநிலை ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்தார்.

Tamilisai Soundararajan contest in south Chennai

பிறகு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்து மீண்டும் கட்சியில் இணைந்தார். 2019ஆம் ஆண்டு தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்ட தமிழிசை எந்த கட்சியிலும் பதவி வகிக்கக் கூடாது என்ற விதிமுறையால் அவர் பாஜகவிலிருந்து தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில் தமிழிசை எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அந்த வகையில் அவர் கடந்த முறை 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் கனிமொழியை எதிர்த்து தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்திரராஜன் போட்டியிட்டார். இந்த தொகுதியில் கடும் போட்டி நிலவியது. இருவருமே பெண் வேட்பாளர்கள், அவர்கள் சார்ந்த கட்சிகளில் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள், அறிவாளிகள், செல்வாக்கு உடையவர்கள் உள்ளிட்ட பண்புகள் இருந்ததால் எதிர்பார்ப்பு எகிறியது.

எனினும் தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி 3,24,161 வாக்குகளை பெற்றார். அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் களமிறங்கிய தமிழிசை சவுந்திரராஜன் 1,14,401 வாக்குகளை பெற்றார். கனிமொழி அந்த தேர்தலில் பெற்ற வாக்குகள் 57.43 சதவீதம் ஆகும். தமிழிசை 20.17 சதவீத வாக்குகளை பெற்றார். இந்த தேர்தலில் தூத்துக்குடியிலேயே திமுக சார்பில் கனிமொழி மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார்.

இதனால் விட்டதை பிடிக்க அதே தொகுதியில் தமிழிசை போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் தென் சென்னையில் போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. தென் சென்னை தொகுதியில் திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியனும் அதிமுக சார்பில் ஜெயவர்தனும் போட்டியிடுகிறார்கள். அவர்களை எதிர்த்து தமிழிசையும் போட்டியிடுகிறார்.

தமிழக பாஜக தலைவராக இருந்த போதிலும் சரி, ஆளுநராக இருந்த போதிலும் சரி தமிழிசை மிகவும் பண்பாளர். குமரி அனந்தன் வளர்த்த பண்பு என முன்னாள் முதல்வர் கருணாநிதியும் புகழாரம் சூட்டியுள்ளாராம். எந்த பிரஸ் மீட்டிலும் நிதானத்தை இழக்காமல் யார் மீதும் அவதூறு பரப்பாமல் உரிய பதிலடியை கொடுப்பதில் வல்லவர். இவருக்கு எப்போதும் அலங்கார பதவியை விட மக்கள் பணிகளை செய்வதுதான் பிடிக்கும்.

ஆனால் அப்படிப்பட்ட அலங்கார பதவியில் கூட புதுவையில் தமிழிசை நிறைய மக்கள் நல பணிகளை செய்திருந்தார். மருத்துவ முகாம்கள், குறைதீர் கூட்டங்களை எல்லாம் தமிழிசை நடத்தியுள்ளார். எல்லாம் சரி தென் சென்னையில் தமிழச்சி, ஜெயவர்தனை எதிர்த்து தமிழிசை வெல்வாரா என்பது பொறுத்திருந்துதான் தெரியும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+