மெகா கூட்டணி அமைக்க போவது பாஜகதான்- கெத்து காட்டும் தமிழிசை சவுந்திரராஜன்
சென்னை: மெகா கூட்டணி அமைக்க போவது பாஜகதான் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத் தேர்தல் வரும் மே மாதம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கவும் வெற்றி பெறவும் வியூகம் வகுத்து வருகின்றன.
உத்தரப்பிரதேசத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மாயாவதி- அகிலேஷ் யாதவ் கூட்டணி நேற்று பேசி முடிவுக்கு வந்தது. இரு கட்சிகளும் தலா 38 இடங்களில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளனர்.
தமிழிசை பங்கேற்பு
இந்த நிலையில் சென்னை எம்ஜிஆர் நகரில் நடந்த பொங்கல் விழாவில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறுகையில் இன்றைய சூழலில் மெகா கூட்டணி அமைக்கப் போவது பாஜகதான்.
கூட்டணி
புகையில் இருக்க கஷ்டப்படுகிறோம், மோடி ஆட்சியில் 5 கோடி பேருக்கு கேஸ் இணைப்பு தந்துள்ளோம். மாயாவதி- அகிலேஷ் கூட்டணி அமைத்ததால் ராகுலால் பெரிய அளவில் அமைக்க முடியாது என்றார் தமிழிசை.
தமிழத்தில் யாருடனும் கூட்டணி
கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் வீடியோ கான்பிரன்ஸிங்கில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தங்கள் கட்சி தமிழகத்தில் யாருடனும் கூட்டணி அமைக்காது.
மதிமுக மறுப்பு
எனினும் கூட்டணிக்காக கதவுகள் திறந்தே உள்ளது. தங்களுடன் புதியவர்களும் வாஜ்பாய் காலத்தில் கூட்டணி அமைத்த பழைய நண்பர்களும் கூட்டணி அமைக்க வாய்ப்பிருப்பதாகவும் மோடி தெரிவித்திருந்தார். இதற்கு மதிமுக மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.