அன்று ரஜினி மக்களை குழப்புகிறார்.. இன்று மக்களின் குரலாக ரஜினி.. தமிழிசையே கன்பியூஸ் ஆயிட்டாரே!
சென்னை: ரஜினிகாந்த் மக்களை குழப்புவதாக அன்று கூறிய தமிழிசை, இன்று ரஜினியின் குரல் மக்களின் குரலாகத்தான் ஒலிக்கிறது என தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார்.
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு எழுதிய "கவனித்தல், கற்றல் மற்றும் தலைமையேற்றல்" என்ற புத்தகம் இன்று சென்னையில் வெளியிடப்பட்டது. இந்த விழா கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.
இந்த விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசுகையில் அமித்ஷாவும் மோடியும் கிருஷ்ணன், அர்ஜூனனை போன்றவர்கள். காஷ்மீர் விவகாரத்திற்காக அமித்ஷாவுக்கு வாழ்த்துகள். காஷ்மீரை இரண்டாக பிரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை சிறப்பானது என்றார்.

காஷ்மீர் விவகாரம்
ரஜினியின் கருத்துக்கு சிலர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறுகையில் காஷ்மீர் விவகாரத்தில் மக்களின் குரலாக ஒலிக்கிறார் ரஜினிகாந்த்.

ப சிதம்பரம்
அரசின் அனைத்து திட்டங்களையும் ரஜினிகாந்த் ஆதரிக்கவில்லை. புதிய கல்விக் கொள்கையை ரஜினி எதிர்த்திருக்கிறார். ஒரு கருத்துக்கு ஆதரவு தெரிவித்தால் உடனே கூட்டணி என முடிவு செய்துவிடக் கூடாது. மிகப் பெரிய பதவியில் இருந்த ப. சிதம்பரம் தமிழகத்துக்கு எந்த உதவியும் செய்ததில்லை என தெரிவித்துள்ளார் தமிழிசை.

ரஜினியை விமர்சித்த தமிழிசை
இன்று ரஜினியை பாராட்டும் இதே தமிழிசை சமயத்துக்கு ஏற்ப தனது கருத்துகளை மாற்றி வருகிறார். புதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா கூறுகையில் 30 கோடி மாணவர்களின் எதிர்காலத்திற்கானது இந்த புதிய கல்விக் கொள்கை. ஆனால் அதை பற்றி அதிகளவில் விவாதங்கள் எழுப்பப்படவில்லை. 3 வயதிலிருந்தே மும்மொழிகளை கற்க வேண்டும் என திணிப்பது ஆபத்தானது என பேசியிருந்தார்.

சூர்யாவின் கருத்து சரியானது
சூர்யாவின் கருத்து பெரிய பேசுபொருளாக இருந்தது. இதற்கு பெரும்பாலானோர் ஆதரவும் சிலர் எதிர்ப்பும் தெரிவித்தனர். இதனிடையே காப்பான் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த், புதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யாவின் கருத்து சரியானது என பாராட்டியிருந்தார்.

மக்களை குழப்பும் ரஜினி
ரஜினி ஆதரவு குறித்து தமிழிசையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அவர் கூறுகையில் ரஜினி, சூர்யா போன்றோர் மக்களை குழப்புகிறார்கள் என தமிழிசை தெரிவித்திருந்தார். பாஜகவுக்கு ஆதரவு நிலைப்பாட்டை ரஜினி கடைப்பிடித்தால் ரஜினியின் குரல் மக்களின் குரல் என்பதும் எதிர்ப்பு நிலைப்பாட்டை கொண்டால் ரஜினி மக்களை குழப்புகிறார் என்பதும் தமிழிசை அவ்வப்போது மாற்றிக் கொள்ளும் கருத்தாக உள்ளது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications