Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாடு அரசின் 2 கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் ராஜினாமா.. அரசு பிளீடரும் விலகல்.. பரபரப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசின் 2 கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் ராஜினாமா செய்துள்ளனர். மொத்தம் 11 பேர் கூடுதல் தலைமை வழக்கறிஞர்களாக இருந்த நிலையில் தற்போது இருவர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் சிலம்பண்ணன், அருண் ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர். தமிழ்நாடு அரசு பிளீடராக இருந்த பி.முத்துக்குமாரும் ராஜினாமா செய்துள்ளார்.

Tamilnadu additional chief advocates resigned from their post

தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் அண்மையில் ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக பி.எஸ்.ராமன் நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில், மேலும் சிலர் ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜினாமா செய்தவர்களுக்கு மாற்றாக புதிதாக கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள், அரசு பிளீடரை தமிழ்நாடு அரசு நாளை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+