தமிழகம், புதுச்சேரி.. எந்தெந்த தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கலாம்? முழு லிஸ்ட்
சென்னை: நாடு முழுக்க கொரோனா தடுப்பூசி, இரண்டாவது கட்ட பணிகள் இன்று துவங்கி உள்ளன. 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் முன்பதிவு செய்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். 45 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால் ரத்த கொதிப்பு அல்லது சர்க்கரை நோய் போன்ற இணை நோய்கள் இருந்தால் பதிவு செய்துகொண்டு தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.
அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படுகிறது. இதுதவிர நாடு முழுக்க பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அடிப்படை அளவுக்கான குளிர்சாதன சேமிப்பு வசதி கொண்ட மருத்துவமனைகள் மட்டும் இந்த பணிகளுக்கு அனுமதி பெற்றுள்ளன.
தனியார் மருத்துவமனைகளில் ஒரு தடுப்பூசிக்கு 250 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. 28 நாட்களில் இரண்டு டோஸ்கள் போடப்பட வேண்டும் . அப்போதுதான் மருந்து முழுமையாக பலன் கொடுக்கும்.
புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் எந்தெந்த தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது? அந்த பட்டியலை நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications