"எல்லாத்துக்கும் எழுந்து நிக்கறீங்க" ஆளுநருக்கு எதிரான தீர்மானம்! தவறுதலாக எழுந்து நின்ற பாஜக MLAகள்
சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டசபையில் ஆளுநருக்கு எதிராகத் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தார். முன்னதாக ஆளுநருக்கு எதிராக விவாதம் நடத்தக் கூடாது என்பதில் தீர்மானம் கொண்டு வந்த போது அங்கே சிரிப்பலை ஏற்பட்டது.
இப்போது ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கே நிலவி வருகிறது. தமிழக அரசு கொண்டு வரும் பல தீர்மானங்களுக்கு அரசு ஒப்புதல் அளிப்பதில்லை என்று ஆளும் தரப்பினர் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
இதனிடையே தமிழ்நாடு ஆளுநர் ரவியின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று தனித் தீர்மானம் தாக்கல் செய்தார். சட்டசபை மசோதாக்களை டெல்லிக்கு அனுப்பக் கால நிர்ணயம் செய்தல், ஆளுநருக்கு உரிய அறிவுரைகளை மத்திய அரசும், குடியரசுத் தலைவரும் வழங்க வேண்டும் எனப் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஆளுநர் தொடர்பாகச் சட்டசபையில் எந்தவொரு விவாதமும் நடத்தக் கூடாது என்று இருந்த விதிகளைத் தளர்த்தும் வகையில் தீர்மானம் ஒன்றை அவை முன்னவர் துரைமுருகன் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்திற்கு அவையில் உள்ள மொத்த உறுப்பினர்களில் நான்கில் 3 பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பதால் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
வாக்கெடுப்பு: பொதுவாகக் குரல் வாக்கெடுப்பு மூலமே பெரும்பாலான தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் நிலையில், 3இல் ஒரு பங்கு ஆதரவு தேவை என்பதால் எண்ணிக்கை அடிப்படையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 2017ஆம் ஆண்டு எடப்பாடிக்கு அரசுக்கு எதிரான தீர்மானம் குறித்த வாக்கெடுப்பு இப்படி எண்ணிக்கை அடிப்படையில் நடைபெற்றது. அதன் பிறகு இப்போது தான் மீண்டும் எண்ணிக்கை அடிப்படையில் வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
இந்த தீர்மானம் கொண்டு வரும் முன்னரே, அதிமுக உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்துவிட்டனர். இதையடுத்து கதவுகளை அடைத்து வாக்கெடுப்பு நடத்தச் சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்ய பாஜக உறுப்பினர்கள் சபாநாயகர் அப்பாவுவிடம் கோரிக்கை வைத்தனர். இருப்பினும் அவர் அதற்கு ஒப்புதல் தரவில்லை.

சிரிப்பலை: சட்டசபையில் ஒவ்வொரு பகுதி வாரியாக ஆதரிப்போரை எழுந்து நின்று வாக்களித்தனர். அப்போது, பகுதி 4இல் உள்ளவர்களில் தீர்மானத்தை ஆதரிப்போர் எழுந்து நிற்க வேண்டும் எனச் சபாநாயகர் அப்பாவு கேட்டுக் கொண்டார். அப்போது தவறுதலாக பாஜக உறுப்பினர் சிஆர் சரஸ்வதியும் எம்ஆர் காந்தியும் எழுந்து நின்றனர். இதைப் பார்த்து மற்ற உறுப்பினர்களும் ஷாக் ஆகினர். பின்னர் சுதாரித்துக் கொண்ட இருவரும் உடனடியாக அமர்ந்துவிட்டார். இதனால் அங்குச் சிரிப்பலை ஏற்பட்டது.
இதையடுத்து பகுதி 4இல் தீர்மானத்தை ஆதரிப்போர் தனித்தனியாக முதலில் வாக்களித்தனர். இதையடுத்து தீர்மானத்தை எதிர்ப்போர் வாக்களிக்கும்படி சபாநாயகர் அப்பாவு கேட்டுக் கொண்டார்.
எம்ஆர் காந்தி: இப்போது இரு பாஜக எம்எல்ஏக்களும் சரியாக எழுந்து நின்றனர். அப்போது சபாநாயகர் "நீங்க என்ன எல்லாத்தும் எழுந்து நிக்கறீங்க.." என்று சொல்ல அவையில் சிரிப்பலை ஏற்பட்டது. ஒட்டுமொத்தமாக இரு வாக்குகள் மட்டுமே எதிராகப் பதிவானது. நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் அவைக்கு வராத நிலையில், அவைக்கு வந்திருந்த பாஜகவின் இரு உறுப்பினர்கள்- எம்ஆர் காந்தி, சரஸ்வதி மட்டுமே இந்த தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தனர். இதனால் தீர்மானம் நிறைவேற்றியதாக அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் குறித்துத் தனித் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்கள் குறித்து பொதுவெளியில் ஆளுநர் தெரிவிக்கும் சர்ச்சைக்குரிய கருத்துக்கள், அவர் வகிக்கும் பதவிக்கு ஏற்புடையதாக இல்லை, என்று முதல்வர் ஸ்டாலின் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.
மோதல் உச்சம்: தமிழக அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே மோதல் உச்சமடைந்து வரும் நிலையில், ஏற்கனவே ஆளுநர் ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக சார்பாக முன்பே குடியரசுத் தலைவரிடம் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்தச் சூழலில் தான் முதல்வர் இந்த தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளார்.
முன்னதாக சமீபத்தில் ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர் ரவி, "சட்டசபையில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் நிலுவையில் வைத்தால் அதற்கு நாகரீகமாக ஒப்புதல் தரவில்லை என்பதே பொருள். கிடப்பில் கிடந்தால் அந்த சட்டம் இறந்துவிட்டதாகவே பொருள்" என்று கூறி சர்ச்சையைக் கிளப்பியிருந்தார். இதற்கு அப்போதே கடும் எதிர்ப்பு கிளம்பியது.
அப்போதே முதல்வர் ஸ்டாலின் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில் தான் சட்டசபை மசோதாக்களை அனுப்பக் கால நிர்ணயம் செய்தல், ஆளுநர் ரவி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
-
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக










Click it and Unblock the Notifications