விசாயத்துக்கு தனி பட்ஜெட்; 69% இடஒதுக்கீடு பாதுகாப்பு... ஆளுநர் உரையில் உறுதி
சென்னை: விவசாயத்துக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று சட்டசபையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆற்றிய உரையில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றதை தொடர்ந்து சட்டசபை கூட்டப்பட்டது. முதல்வர் மற்றும் புதிய எம்.எல்.ஏக்கள் அப்போது பதவி பிரமாணம் ஏற்றனர்.
இதனைத் தொடர்ந்து சட்டசபையின் புதிய சபாநாயகராக அப்பாவு மற்றும் துணை சபாநாயகராக கு. பிச்சாண்டி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து சட்டசபையில் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது.

சட்டசபை கூட்டம்
கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று காலை 10 மணிக்கு சட்டசபை கூடியது. புதிய அரசின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார்.

தமிழில் பேசிய பன்வாரிலால்
வணக்கம் என்று தமிழில் கூறி உரையைத் தொடங்கினார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழ் இனிமையான மொழி என புகழாரம் சூட்டினார். மேலும் அவர் பேசுகையில், எளிமையான வாழ்க்கையை வாழுங்கள்- ஊழலை அகற்றி விடும்- இது என் செய்தி. தமக்கு வாக்களித்தவர், வாக்களிக்காதோர் என பாரபட்சமின்றி தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்குமான அரசாக இந்த அரசு செயல்படும் என்று தெரிவித்தார்.

மாநில சுயாட்சி
மேலும் திராவிட இயக்கத்தின் கொள்கைகளை அடித்தளமாக கொண்ட அரசாக செயல்படும்; மாநில சுயாட்சி என்கிற இலக்கை எட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். தமிழ் வழியில் பயின்றோருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் ஆளுநர் தமது உரையில் தெரிவித்தார்.

விவசாய பட்ஜெட்
வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

69% இடஒதுக்கீடு- கச்சத்தீவு
தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் 69% இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்; கச்சத் தீவை மீட்பதற்காக மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்; மீனவர் நலனுக்கான தேசிய ஆணையம் உருவாக்க வலியுறுத்துவோம் என்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆற்றிய உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications