தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் ஜூன் 21ஆம் தேதி கூடும்.. சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!
சென்னை: தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் ஜூன் 21ஆம் தேதி கூடும் என்று தமிழ்நாடு சட்டசபை சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக கட்சி ஆட்சி பொறுப்பேற்று ஒரு மாதம் ஆகிவிட்டது. எம்எல்ஏக்கள் பதவி ஏற்பு கூட்டம் சட்டசபையில் நடந்த நிலையில் தற்போது தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன்படி தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் ஜூன் 21ஆம் தேதி கூட உள்ளது. ஜூன் 21ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் சட்டசபைக் கூடுகிறது. இதையடுத்து சட்டசபை அலுவல் கூட்டம் நடைபெறும். இந்த அலுவல் கூட்டத்தில் சட்டசபை எத்தனை நாள் நடைபெறும் என்று முடிவு எடுக்கப்படும்.
சென்னை கலைவாணர் அரங்கில் சட்டசபை கூடுகிறது. கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி சட்டசபை நடைபெறும் என்று தமிழ்நாடு சட்டசபை சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சட்டசபை உறுப்பினர்கள் மட்டுமின்றி, பணியாளர்கள் எல்லோருக்கும் கொரோனா டெஸ்ட் செய்து, நெகட்டிவ் வந்தால் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படும்.
4 முஸ்லிம்களை.. வெறி கொண்டு லாரி ஏற்றி கொன்ற 20 வயது இளைஞர்.. 9 வயது சிறுவன் உயிர் ஊசல்.. அதிர்ச்சி
முதல் நாள் கூட்டத்தில் ஆளுநர் உரையின் மீது விவாதம் நடைபெறும். ஆளுநர் உரையின் மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நடைபெறும். அனைத்து கட்சியினருக்கும் இதில் சம உரிமை, சம வாய்ப்பு வழங்கப்படும்.