Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்ன மக்கா.. பகுத்தறிவோடு பதில் சொல்லு அல்லது பதவி விலகு! மனோ தங்கராஜுக்கு பாஜகவின் 6 கேள்விகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆவின் பால் விவகாரத்தில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இடையே வார்த்தைப் போர் நடைபெற்று வரும் நிலையில், தமிழ்நாடு பாஜக, அமைச்சர் மனோ தங்கராஜை கடுமையாக விமர்சித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

ஆவின் பால் விவகாரம் பற்றி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்வைத்த குற்றச்சாட்டை தொடர்ந்து, அவரை விமர்சித்து பேட்டி கொடுத்திருந்தார் அமைச்சர் மனோ தங்கராஜ். அதற்கு எதிர்வினையாக, தன் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் கேட்டு 48 மணி நேரம் கெடு விதித்தார் அண்ணாமலை. உங்களால் நிரூபிக்க முடியவில்லையெனில், தவறான தகவலை பகிர்ந்தமைக்கு மன்னிப்பு கோரி, உங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனக் கூறினார் அண்ணாமலை.

Tamilnadu bjp asks 6 questions to minister mano thangaraj

அதற்கு அமைச்சர் மனோ தங்கராஜ், “மன்னிப்பு கேட்காவிட்டால் என்ன, தலையை சீவி விடுவாயா? 48 மணி நேரம்.. மிரட்டலா? எனது கருத்தில் எள்ளளவும் மாற்றம் இல்லை. மன்னிப்பு கேட்க நாங்கள் ஒன்றும் சாவர்க்கார் பரம்பரை அல்ல” என்றார். இதையடுத்து, பாஜக தலைவர் அண்ணாமலை, “ஆதாரமற்ற குற்றச்சாட்டை பரப்பிய உங்கள் மீது 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடரவுள்ளேன்.” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில், அமைச்சர் மனோ தங்கராஜுக்கு 6 கேள்விகளை எழுப்பியுள்ளது தமிழக பாஜக. தமிழ்நாடு பாஜகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “மனோ தங்கராஜ் அவர்களே…
“எப்படி இருக்க பா? என்ன மக்கா… சந்தோஷமா இருக்கியா?”
சரி… ஏன் இதுவரை கேட்ட எந்த கேள்விகளுக்கும் உருப்படியான பதில் சொல்லல?
மறுபடியும் கேட்கிறோம்! பகுத்தறிவோடு பதில் சொல், அல்லது பதவி விலகு!

1. முதலில், ஆவின் முறைகேடுகள் குறித்து தலைவர் அண்ணாமலை அவர்கள் கசப்பான கேள்விகளை கேட்டதால், கடுப்பில் அவர் மீது நீங்கள் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் எங்கே? (30 hours more ⏳)

2. 6% கொழுப்புச் சத்து இருக்க வேண்டிய ஆரஞ்சு நிற பாக்கெட் பாலில், வெறும் 4.79% கொழுப்புச் சத்து மட்டுமே இருப்பது, FSSAI அங்கீகரித்த பரிசோதனைக் கூடத்தில்,
தமிழ்நாடு பாஜக சார்பில் மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் தெரிய வந்திருக்கிறது. பாக்கி 1.21% எங்கே?

3. உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையத்தின் (FSSAI) பரிந்துரைப்படி, நிலைப்படுத்தப்பட்ட பாலில் 4.5% கொழுப்புச்சத்து இருக்க வேண்டியது அவசியம். அதை 3.5% மாக குறைத்தது ஏன்?

4. இந்நிலையில், பாலில் உள்ள கொழுப்பினை 4.5%ல் இருந்து 3.5% க்கு குறைத்த பின்பும், அதன் விலையை குறைக்காதது ஏன்?

5. FSSAI பரிந்துரைப்படி, அளவில் 3% கொழுப்புள்ள பால் மட்டுமே சமன்படுத்தப்பட்ட பாலாக வகைப்படுத்தப்படும். ஆனால், தற்பொழுது 3.5% கொழுப்புள்ள “டிலைட்” பாலை சமன்படுத்தப்பட்ட பால் என்று எவ்வாறு அழைக்க முடியும்?

6. திமுக ஆட்சிக்கு வந்த 2 வருடங்களில், பால் கொள்முதல் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. உதாரணமாக, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில், பால் கொள்முதலில் 6 லட்சம் லிட்டர் குறைந்துள்ளது ஏன்?
பதில்களுக்கு மக்களோடு அமர்ந்து காத்திருக்கிறோம்!” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+