"மண்ணிலே ஈரமுண்டு".. இருளர் இன மக்களுக்கு பட்ஜெட்டில் குட் நியூஸ் சொன்ன பிடிஆர்.. இத்தனை வீடுகளா!
சென்னை: தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் நலத்துறைக்கு 4281.76 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டசபையில் 2022-2023-ம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டை நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் உரையில் சமூக நீதி தொடர்பான பல்வேறு அறிவிப்புகளை நிதி அமைச்சர் பிடிஆர் வெளியிட்டார்.
தமிழக பட்ஜெட்டில் தந்தை பெரியாரின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு 21 மொழிகளில் பதிப்பிட ரூ.5 கோடி ஒதுக்கீடு

ஆதிதிராவிடர் நலத்துறை
சமத்துவபுரங்கள் 190 கோடி ரூபாயில் சீரமைக்கப்படும். இந்த சமத்துவபுரங்கள் சீரமைப்பு இன்றி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இவை மாற்றி அமைக்கப்படும். உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ படிப்பைத் தொடர தேவையான உதவிகளை அரசு வழங்கும். ஆதிதிராவிடர் நலத்துறைக்கு 4281.76 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

இருளர்
விளிம்பு நிலையில் இருக்கும் இருளர்கள் போன்ற பண்டைய பழங்குடியினருக்கு இந்த ஆண்டு 20.7 கோடி ரூபாய்க்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது அவர்களுக்கு வீடு கட்டுவதற்காக மட்டும் ஒதுக்கப்பட்ட நிதி ஆகும். இதன் மூலம் அவர்களுக்கு 443 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இது போக வரும் ஆண்டு நிதியிலும் இருளர்கள் போன்ற பண்டைய பழங்குடியினருக்கு வீடுகள் கட்டித்தரப்பட உள்ளது.
Recommended Video

வீடுகள்
அதன்படி வரும் நிதியாண்டில் அவர்களுக்கு 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கித்தரப்படும். அதன்மூலம் 1000 புதிய வீடுகள் இருளர்களுக்கு கட்டித்தரப்படும். இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும். ஏற்கனவே கட்டப்பட்ட வீடுகளில் இருளர்கள் குடியமர்த்தப்பட்டு வருகிறார்கள். அதற்கான பணிகளும் விரைவில் முடிக்கப்படும் என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

ஜெய் பீம்
தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக இருளர்கள் சொந்த வீடு இன்றி கஷ்டப்பட்டு வருகிறார்கள். பல வருடமாக ஒரே ஊர்களில் இருக்கும் இருளர்களுக்கு கூட சொந்த வீடுகள் இல்லை. இவர்களின் கஷ்டங்களை நிஜ பின்னணியோடு சமீபத்தில் ஜெய் பீம் படம் வெளிச்சம் போட்டு காட்டியது. இப்படிப்பட்ட நிலையில்தான் இவர்களுக்கு மொத்தமாக 1443 வீடுகள் கட்டித்தரப்படும் என்று நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications