தயாளு அம்மாள் சிகிச்சை முடிந்து.. மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்!
சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் சென்னை கோபாலபுரம் இல்லத்தில் வசித்து வருகிறார். 89 வயதான தயாளு அம்மாள் வயது மூப்பு காரணமாக கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார்.
அவருக்கு கோபாலபுரம் இல்லத்திலேயே தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்தன. கடந்த சில ஆண்டுகளாகவே, அவர் வெளியே வருவது இல்லை.

வயது மூப்பு காரணமாக உடல் நலப் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், நேற்றைய தினம் அவர் ஆயிரம் விளக்கு பகுதியிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காகவே அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்பட்டது.
மேலும், முதல்வர் மு.க. ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனைக்கு நேரில் சென்று தனது தாயாரின் உடல் நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இந்நிலையில், சிகிச்சை முடிந்து இன்று மாலை அவர் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் வீடு திரும்பினார்.












Click it and Unblock the Notifications