சென்னையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி
சென்னை: சென்னையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை சந்தித்தார். இச்சந்திப்பின் போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து ஆளுநரிடம் முதல்வர் விளக்கம் அளித்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா காலத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை 6-வது முறையாக இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள் கேபி அன்பழகன், சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ஆகியோரும் ஆளுநர் மாளிகைக்கு சென்றனர்.

மேலும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாயும் முதல்வருடன் சென்றனர். இந்த சந்திப்பின் போது தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆளுநரிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.
அத்துடன் அண்ணா பல்கலைக் கழகத்தை 2 ஆக பிரிப்பது உள்ளிட்டவை தொடர்பாகவும் ஆளுநரிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications